எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காத துலாம் ராசிக்கார்களே பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆண்டாக இருக்க போகிறது. இதுவரை தடைபட்ட நல்ல விஷயங்கள் இனி ஒவ்வொன்றாக நடக்க துவங்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் தேடி வர வாய்ப்புள்ளது. திறமைக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கிகளும் கைக்கு வரும்.

எதிலும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிலும் நேர்மையாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள், பிரச்சனைகள் நீங்கி நிம்மதியான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். கடன்களை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். உணவு பழக்கங்களில் கட்டுப்பாடுகள் அவசியம். பெண்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். திறமைகளை வெளிப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பீர்கள். வீட்டு பெரியோர்களின் ஆதரவு இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தொழிலில் வளர்ச்சி இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் அனுபவம் இல்லாமல் இறங்க வேண்டாம். அரசுத்துறையில் அனுகூலம் ஏற்படும். பணத்தை கையாளுவதில் கவனம் வேண்டும். அரசியலில் ஆதரவு அதிகரிக்கும். பொது இடங்களில் பேசம் போது நிதானமாக இருக்க வேண்டும். கலைஞர்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.வாகன பயணத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அடி வயிறு, கழிவு உறுப்புகளில் பாதிப்பு, சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம் : குழப்பங்கள் நீங்கி நன்மைகள் அதிகரிக்க நடராஜரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபட்டு வருவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}