சிவகாசி: சிவகாசியில் தங்களது சகோதரியை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெண்ணின் சகோதரர் வெட்டிக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவருடைய மகன் கார்த்திக் பாண்டி. 26 வயதான இவர் சிவகாசியில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். சிவகாசி வம்பிழுத்தான் மூக்குப்பகுதியை சேர்ந்த நந்தினி என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கார்த்திக்கும் நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்தது. இவர்கள் காதலிக்கும் விஷயத்தை வீட்டில் தெரிவிக்கவே, இரு விட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் பாண்டி நந்தினியை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அய்யம்பட்டியில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். நந்தினி சிவகாசி அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். வேலை முடித்து வீடு திரும்ப உள்ள நந்தினியை அழைத்துச் செல்வதற்காக கார்த்திக் அங்கு வந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று பேர் கார்த்திகை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி வீழ்த்தினர். இதில் கார்த்திக் கீழே விழுந்து, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நந்தினியின் சகோதரர் பாலமுருகன், நண்பர்கள் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து காவல் நிலையத்தில் சரண் அடைந்த பாலமுருகன், தனபாலன், சிவா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}