மதுரை-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம்.. டிசம்பர் 20ம் தேதி முதல்!

Dec 07, 2024,04:30 PM IST

சென்னை: மதுரை விமான நிலையம் 24 மணி சேவையை தொடங்கியுள்ளது. இதையடுத்து மதுரை-சென்னை இடையேயான விமான சேவை டிசம்பர் 20ம் தேதி முதல் இரவு நேரங்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு , கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக மாற்றி அமைத்தது. ஆனால்,  தற்போது வரை எந்த நிறுவனமும் இரவு நேரப் பயணத்திற்கு முன்வராமல் இருந்து வந்தது.




இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு, இன்டிகோ நிறுவனத்தின் சார்பில் இரவு நேர சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 20ம் தேதி முதல் இந்த இரவு நேர சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது. அதே போல மறுமார்க்கமாக இரவு 10.45 மணிக்கு பறப்பட்டு இரவு 12.05 மணிக்கு சென்னை சென்றடையும். 


சென்னை - மதுரை இடையே 10 விமான சேவைகள் உள்ளன. இதில் 9 சேவையை இன்டிகோ நிறுவனமே வழங்கி வருகிறது. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக இது சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு. சர்வதேச விமானங்களும் இங்கு இயக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.


தற்போது மதுரை மற்றும் தென் மாவட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு்ச செல்ல திருச்சி அல்லது சென்னைக்குப் பயணிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி ஆகியவை மட்டுமே சர்வதேச விமான நிலையங்களாக உள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்