சென்னை: மதுரை விமான நிலையம் 24 மணி சேவையை தொடங்கியுள்ளது. இதையடுத்து மதுரை-சென்னை இடையேயான விமான சேவை டிசம்பர் 20ம் தேதி முதல் இரவு நேரங்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு , கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக மாற்றி அமைத்தது. ஆனால், தற்போது வரை எந்த நிறுவனமும் இரவு நேரப் பயணத்திற்கு முன்வராமல் இருந்து வந்தது.

இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு, இன்டிகோ நிறுவனத்தின் சார்பில் இரவு நேர சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 20ம் தேதி முதல் இந்த இரவு நேர சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது. அதே போல மறுமார்க்கமாக இரவு 10.45 மணிக்கு பறப்பட்டு இரவு 12.05 மணிக்கு சென்னை சென்றடையும்.
சென்னை - மதுரை இடையே 10 விமான சேவைகள் உள்ளன. இதில் 9 சேவையை இன்டிகோ நிறுவனமே வழங்கி வருகிறது. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக இது சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு. சர்வதேச விமானங்களும் இங்கு இயக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.
தற்போது மதுரை மற்றும் தென் மாவட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு்ச செல்ல திருச்சி அல்லது சென்னைக்குப் பயணிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி ஆகியவை மட்டுமே சர்வதேச விமான நிலையங்களாக உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}