சென்னை: மதுரை விமான நிலையம் 24 மணி சேவையை தொடங்கியுள்ளது. இதையடுத்து மதுரை-சென்னை இடையேயான விமான சேவை டிசம்பர் 20ம் தேதி முதல் இரவு நேரங்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு , கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக மாற்றி அமைத்தது. ஆனால், தற்போது வரை எந்த நிறுவனமும் இரவு நேரப் பயணத்திற்கு முன்வராமல் இருந்து வந்தது.

இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு, இன்டிகோ நிறுவனத்தின் சார்பில் இரவு நேர சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 20ம் தேதி முதல் இந்த இரவு நேர சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது. அதே போல மறுமார்க்கமாக இரவு 10.45 மணிக்கு பறப்பட்டு இரவு 12.05 மணிக்கு சென்னை சென்றடையும்.
சென்னை - மதுரை இடையே 10 விமான சேவைகள் உள்ளன. இதில் 9 சேவையை இன்டிகோ நிறுவனமே வழங்கி வருகிறது. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக இது சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு. சர்வதேச விமானங்களும் இங்கு இயக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.
தற்போது மதுரை மற்றும் தென் மாவட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு்ச செல்ல திருச்சி அல்லது சென்னைக்குப் பயணிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி ஆகியவை மட்டுமே சர்வதேச விமான நிலையங்களாக உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}