சென்னை: நடிகரும், இயக்குனருமான தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்குனராக அவதரித்து பவர் பாண்டி, ராயன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அவதரித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இளைஞர்களின் காதல், திருமண உறவு போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் என இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
ஜீ.வி பிரகாஷ் இசையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது.இப்பாடலில் பிரியங்கா மோகன் கெஸ்ட் ரோலில் நடனமாடி இருந்தார்.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
அதே மார்ச் 21ஆம் தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என Netflix அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}