சென்னை: நடிகரும், இயக்குனருமான தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்குனராக அவதரித்து பவர் பாண்டி, ராயன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அவதரித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இளைஞர்களின் காதல், திருமண உறவு போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் என இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
ஜீ.வி பிரகாஷ் இசையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது.இப்பாடலில் பிரியங்கா மோகன் கெஸ்ட் ரோலில் நடனமாடி இருந்தார்.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
அதே மார்ச் 21ஆம் தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என Netflix அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}