சென்னை: நடிகரும், இயக்குனருமான தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்குனராக அவதரித்து பவர் பாண்டி, ராயன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அவதரித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இளைஞர்களின் காதல், திருமண உறவு போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் என இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
ஜீ.வி பிரகாஷ் இசையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது.இப்பாடலில் பிரியங்கா மோகன் கெஸ்ட் ரோலில் நடனமாடி இருந்தார்.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
அதே மார்ச் 21ஆம் தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என Netflix அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
எங்கே என் சொந்தம்?
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
{{comments.comment}}