ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19, 20 ஆகிய மூன்று நாட்கள் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று நாட்கள் ஊட்டி, குன்னூருக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவிலும் பகலிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது குளுமையான சூழ்நிலை அங்கு நிலவி வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18 , 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா மாவட்ட அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு மிக கனமழை காரணமாக
ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
ஊட்டிக்கு யாரும் வர வேண்டாம் என கூறவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார். கன மழை பெய்தால் மலைச் சாலையில் மண் சரிவு உள்ளிட்டவை ஏற்படலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் இந்த அறிவுறுத்தலை கலெக்டர் விடுத்துள்ளார்.
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}