ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19, 20 ஆகிய மூன்று நாட்கள் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று நாட்கள் ஊட்டி, குன்னூருக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவிலும் பகலிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது குளுமையான சூழ்நிலை அங்கு நிலவி வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18 , 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா மாவட்ட அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு மிக கனமழை காரணமாக
ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
ஊட்டிக்கு யாரும் வர வேண்டாம் என கூறவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார். கன மழை பெய்தால் மலைச் சாலையில் மண் சரிவு உள்ளிட்டவை ஏற்படலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் இந்த அறிவுறுத்தலை கலெக்டர் விடுத்துள்ளார்.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}