ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19, 20 ஆகிய மூன்று நாட்கள் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று நாட்கள் ஊட்டி, குன்னூருக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவிலும் பகலிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது குளுமையான சூழ்நிலை அங்கு நிலவி வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18 , 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா மாவட்ட அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு மிக கனமழை காரணமாக
ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
ஊட்டிக்கு யாரும் வர வேண்டாம் என கூறவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார். கன மழை பெய்தால் மலைச் சாலையில் மண் சரிவு உள்ளிட்டவை ஏற்படலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் இந்த அறிவுறுத்தலை கலெக்டர் விடுத்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}