ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19, 20 ஆகிய மூன்று நாட்கள் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று நாட்கள் ஊட்டி, குன்னூருக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவிலும் பகலிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது குளுமையான சூழ்நிலை அங்கு நிலவி வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18 , 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா மாவட்ட அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு மிக கனமழை காரணமாக
ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
ஊட்டிக்கு யாரும் வர வேண்டாம் என கூறவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார். கன மழை பெய்தால் மலைச் சாலையில் மண் சரிவு உள்ளிட்டவை ஏற்படலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் இந்த அறிவுறுத்தலை கலெக்டர் விடுத்துள்ளார்.
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
{{comments.comment}}