டெல்லி: மத்தியில் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனாலும் இன்றைய அவரது பட்ஜெட் உரையின் நீளம் சற்று குறைவுதான். 2020ம் ஆண்டுதான் அவர் நீண்ட நேரம் பேசி சாதனை படைத்திருந்தார்.
தொடர்ச்சியாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 முறையும், அதிகபட்சமாக 10 முறையும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இன்றுடன் தொடர்ச்சியாக 6 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலில் இதுவரையிலும் மிக நீளமான உரை என்றால் அது 2020ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் ஆற்றி உரை என்றே சொல்லலாம். அப்போது அவர் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு பேசினார். இடையில் அவருக்கு சோர்வும் வந்து விட்டது நினைவிருக்கலாம்.
மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 2வது இடம் பிடித்துள்ளார் ப.சிதம்பரம். 3வது இடத்தில் பிரணாப் முகர்ஜி உள்ளார். அவர் 8 முறை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 4வது இடம் பிடித்துள்ளார்.
அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்து முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களும் ஆண்கள் தான். பெண் நிதியமைசராக இருந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் நிர்மலா சீதாராமன் மட்டுமே.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}