டெல்லி: மத்தியில் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனாலும் இன்றைய அவரது பட்ஜெட் உரையின் நீளம் சற்று குறைவுதான். 2020ம் ஆண்டுதான் அவர் நீண்ட நேரம் பேசி சாதனை படைத்திருந்தார்.
தொடர்ச்சியாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 முறையும், அதிகபட்சமாக 10 முறையும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இன்றுடன் தொடர்ச்சியாக 6 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலில் இதுவரையிலும் மிக நீளமான உரை என்றால் அது 2020ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் ஆற்றி உரை என்றே சொல்லலாம். அப்போது அவர் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு பேசினார். இடையில் அவருக்கு சோர்வும் வந்து விட்டது நினைவிருக்கலாம்.
மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 2வது இடம் பிடித்துள்ளார் ப.சிதம்பரம். 3வது இடத்தில் பிரணாப் முகர்ஜி உள்ளார். அவர் 8 முறை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 4வது இடம் பிடித்துள்ளார்.
அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்து முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களும் ஆண்கள் தான். பெண் நிதியமைசராக இருந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் நிர்மலா சீதாராமன் மட்டுமே.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}