டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜூலை 26 ஆம் தேதி காலை டெல்லி செல்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் வரும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது. இதுவரை இருந்து வந்த மத்திய திட்ட குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆயோக் கூட்டம் ஜூலை 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் குழுவின் ஒன்பதாவது கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

இதில் அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.அதனால் இந்த நிதி ஆயோ க் குழு கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயக்குழு கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, நிதி விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது .
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜூலை 26 ஆம் தேதி காலை முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். 3வது முறையாக பிரதமரான பின்னர் மோடியை முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}