டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜூலை 26 ஆம் தேதி காலை டெல்லி செல்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் வரும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது. இதுவரை இருந்து வந்த மத்திய திட்ட குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆயோக் கூட்டம் ஜூலை 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் குழுவின் ஒன்பதாவது கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

இதில் அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.அதனால் இந்த நிதி ஆயோ க் குழு கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயக்குழு கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, நிதி விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது .
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜூலை 26 ஆம் தேதி காலை முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். 3வது முறையாக பிரதமரான பின்னர் மோடியை முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}