டெல்லி: மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும்புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதில் முதல் வரிசையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது.
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தல் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னைத்துள்ளார். அவை,
கடந்த 15 ஆவது நிதி குழுவின் பரிந்துரைகள் படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரி வருவாய் பங்கினை 41% ஆக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 சதவீதமாக உயர்த்தப்படுவது தான் முறையானதாக இருக்கும்.
P.M.SHRI திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A.நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-25 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதம் இன்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க திட்டம் தேவை. ஆகவே காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழி பெயர்த்துக் கொள்வார்கள்.
இந்தியாவில் உள்ள நகர்ப்புறங்களில் மேம்பாட்டு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசர தேவை. இது போன்ற ஒரு திட்டத்தை விரைவில் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மத்திய மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம்: பிரதமர் மோடி!
ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை.. சுப்மன்கில் கேப்டன்.. இங்கிலாந்து டூருக்கான அணி அறிவிப்பு!
காஷ்மீரில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல்!
நிதி ஆயோக் கூட்டம்: இந்த மாநில முதல்வர்கள் எல்லாம் புறக்கணிச்சிருக்காங்க.. யார் யார் தெரியுமா?
மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துங்க.. முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!
கேரளாவில் துவங்கியது.. தென்மேற்கு பருவ மழை.. ஜூன் முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவும்..!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது
இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழு அறிவிப்பு!
{{comments.comment}}