டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் ஜிஎஸ்டி.,யா? : கட்காரி விளக்கம்

Sep 13, 2023,10:43 AM IST
டில்லி : டீசல் வாகன விற்பனைக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல் குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

டீசல் வாகன விற்பனைக்கு அக்டோபர் 01 ம் தேதி முதல் கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இது பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.



அதற்கு பதிலளித்த அவர், அப்படி எந்த ஒரு பரிசீலனையும் தற்போது வரை மத்திய அரசிடம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.  அதே சமயம் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக, அதிக புகையை வெளிப்படும் டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி மாசுபாடு வரி என்ற பெயரில் விதிக்கலாம் என நான் கூறி இருந்தேன் என்றார்.

இது போன்ற தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அவசரமாக விளக்கம் அளிக்க வேண்டி உள்ளது என எக்ஸ் தளத்திலும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 2070 ம் ஆண்டிற்குள் காற்றில் கார்பன் அளவை ஜீரோ என்ற அளவில் கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 

டீசல் போல் எரிபொருட்களால் ஏற்படும் அதிக புகையை கட்டுப்படுத்த வேண்டும் என ஆலோசித்து வருவது உண்மை தான். வாகன விற்பனையும் அதிகரித்து  வருவதால் மாற்று எரிபொருட்கள் பயன்பாட்டை கொண்டு வரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவைகள் அதிக செலவில்லாமல், மாசுபாடு ஏற்படுத்தாததாகவும் இருக்கும் என்றார்.

சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய கட்காரி, டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பத தொடர்பாக மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என குறிப்பிட்டிருந்தார். இதனால் மத்திய அரசு முடிவு செய்து விட்டதாகவும், உடனடியாக அமல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் பரவ துவங்கி விட்டன. இதனால் நிதின் கட்காரி தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்