சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை எல்லாம் நடக்கவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்து, வேட்பாளர்களையும் அறிவிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஒரு மாதமாகவே நாடாளுமன்றம் தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான அதிமுக கூட்டணியில் இதுவரை புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை இணைந்துள்ளன. திமுக தரப்பு இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. பாஜகவிலும் கூட சில பல நிகழ்வுகள் அதிரடியாக நடந்து வருகின்றன. அதிமுக தரப்புதான் அமைதியாக இருக்கிறது.
பாமக, தேமுதிக எங்கு போகும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் தேமுதிக அதிமுகவுடன் சேருமா? அல்லது பாஜகவுடன் சேருமா என்று தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்தின் இந்த முடிவால் தேமுதிக நிர்வாகிகள் நிம்மதி அடைந்துள்ளனர் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், அதிமுக தரப்பிலும் கூட எதுவும் இதுவரை இறுதி செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. பிரேமலதா விஜயகாந்த் தினசரி விஜயகாந்த் நினைவிடத்திலேயே இருக்கிறார். அங்கு நடந்து வரும் அன்னதானம் உள்ளிட்டவற்றைப் பார்த்துக் கொள்கிறார். இடையில் மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்ற ஒன்றையும் இங்கு தேமுதிகவினர் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}