மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லாத தீர்மானம் மீது ஆகஸ்ட் 8 ல் விவாதம்

Aug 01, 2023,02:53 PM IST
டெல்லி : மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 08 ம் தேதி விவாதம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு ஆகஸ்ட் 10 ம் தேதி பிரதமர் பதிலளித்து பேச உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் வன்முறை, கலவரம் தொடர்பாக நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் கூட்டத்தொடர் முழுவதுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த வாரம் கொண்டு வந்தன.



இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பட்டதாக லோக்சபா சபாநாயகரும் அறிவித்திருந்தார். ஆனால் எப்போது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 08 ம் தேதி லோக்சபாவில் விவாதம் நடைபெறும் என லோக்சபா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10 ம் தேதி எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அரசு தரப்பில் கூறுகையில், மணிப்பூர் கலவரம் தொடர்பான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிப்பார். ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் விரிவான விளக்கத்தை, பதிலை வலியுறுத்துவதால் இந்த முக்கியமான விஷயத்தில் பிரதமரே பதிலளிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆகஸ்ட் 08 ம் தேதி என்ன நடக்கும் என எதிர்பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்