Leo Release: "நூறு பஞ்சாயத்தை தீத்தாச்சுடா".. லியோ வருது.. மகிழ்ச்சியுடன் சொன்ன ரோகிணி!

Oct 18, 2023,06:23 PM IST

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படாது என்று  அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த தியேட்டரையும் சூப்பராக புதுப்பித்து லியோவை நாளை ரிலீஸ் செய்யப் போவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதே ரோகிணி தியேட்டரில்தான் லியோ டிடைலர் வெளியிடப்பட்டபோது ரசிகர்கள் மோசமாக நடந்து கொண்டு, மொத்த சீட்டுகளையும் கிழித்தெடுத்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம். ரோகிணியில் லியோ  ரிலீஸாகாதது, லியோ பட சர்ச்சைகளில் ஒன்றாக சேர்ந்தது. ஆனால் தற்போது ரோகிணியிலும் லியோ வருவதால் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர்.




செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படம் நாளை ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என பலர் இதில் நடித்துள்ளனர்.  இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை வெளிவருகிறது.


தெலுங்கில் இப்படம் வெளிவருவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு அது சரியாகி இப்போது திட்டமிட்டபடி அங்கு வருகிறது. மற்ற மாநிலங்களிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான் அடுத்தடுத்து சர்ச்சைகள், முட்டுக்கட்டைகள், இடையூறுகள்.. தொடர் கதையாகி வருகின்றன.


லியோ இசை வெளியீடு கடைசி நேரத்தில் ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை வசனம், சென்சாரில் கட் செய்யப்பட்ட காட்சிகள்  என பல சர்ச்சைகளில் இப்படம் சிக்கித் தவித்து வந்தது. டிரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் ரோகிணி திரையங்கில் உள்ள சீட்டுகளை கிழித்தது. அதனைத் தொடர்ந்து நடனக் கலைஞர்கள் 1300 பேருக்கு ஊதியம் வழங்காமை எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் தொடர்ந்து சிக்கி வந்தது.




உச்சகட்டமாக லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி காட்சிக்குப் பதில்,  7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்குப் போய்ப் பார்த்தது. அங்கும் அதற்கு தோல்வியே கிடைத்தது. இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், ஒரு வழியாக நாளை ரிலீஸாகிறது லியோ. 


அதேசமயம், சென்னையில் ரோகிணி, வெற்றி உள்ளிட்ட சில தியேட்டர்களில் படம் ரிலீஸாவது தொடர்பாக  பது சிக்கல் எழுந்தது. விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை முடியாததால் இங்கு படங்கள்  ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரோகிணி தியேட்டர்காரர்கள், படம் ரிலீஸாகாது என்று கூறி போர்டே வைத்து விட்டனர். இதனால் ரசிகர்கள் சோகமாகியிருந்தனர்.


இந்த நிலையில் தற்போது பிரச்சினை தீர்ந்து ரோகிணியிலும் நாளை லியோ ரிலீஸாகிறது. இதுதொடர்பான அறிவிப்பை ரோகிணி தியேட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அது போட்ட டிவீட்டில்,  "நூறு பஞ்சாயத்தை தீத்தாச்சுடா.. வரலாறு மொத்தம் பிளட் ஆச்சுடா.. அக்ரிமென்ட் சைன்ட். ரோகிணியிலும் லியோ" என்று கூறியுள்ளனர்.


இதனால் விஜய் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர். ரோகிணியிலும் தற்போது லியோ கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்