சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டு திட்டம். அது முடிந்து விட்டது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் அம்மா மினி கிளினிக். பெரிய அளவில் மருத்துவமனைகள் இல்லாத இடங்களில் இந்த கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது அந்த திட்டம் முடிவடைந்து விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
புதுக்கோட்டை பல் மருத்துவக்கல்லூரியை வருகிற 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு மட்டுமே தற்போது இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சனிக்கிழமைகளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் மத்திய அரசு அறிவிப்பிற்கு முன்பே தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டது.
அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டுக்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது. அது முடிந்து விட்டதால் அதை மீண்டும் தொடர முடியாது. அதேசமயம், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் என்பது 5 ஆண்டுக்கான திட்டம். இந்த திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவு பெற்றாலும், அதனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. அதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}