சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டு திட்டம். அது முடிந்து விட்டது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் அம்மா மினி கிளினிக். பெரிய அளவில் மருத்துவமனைகள் இல்லாத இடங்களில் இந்த கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது அந்த திட்டம் முடிவடைந்து விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
புதுக்கோட்டை பல் மருத்துவக்கல்லூரியை வருகிற 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு மட்டுமே தற்போது இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சனிக்கிழமைகளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் மத்திய அரசு அறிவிப்பிற்கு முன்பே தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டது.
அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டுக்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது. அது முடிந்து விட்டதால் அதை மீண்டும் தொடர முடியாது. அதேசமயம், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் என்பது 5 ஆண்டுக்கான திட்டம். இந்த திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவு பெற்றாலும், அதனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. அதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}