சென்னை: கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை ஏறத் துவங்கி உள்ளது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
போன மாசம் நல்லா இருந்துச்சு.. விலை ஜம் ஜம்னு இறங்கிட்டே போச்சு.. இதனால் மக்கள் ஹேப்பியாக இருந்தனர். ஆனால் இப்போது விலை உயர்ந்தவாக்கிலேயே இருக்கிறது. இப்படியே போனா எப்படிப்பா.. கொஞ்சம் இறங்கி வாயேன் என்று தங்கத்தைப் பார்த்து மக்கள் கெஞ்சும் நிலைக்குப் போய் விட்டது.

இந்த விலை ஏற்றம் நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடை கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம், 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5670 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45360 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6185 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.75.30 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 602.40 காசாக உள்ளது.
நான்கு நாட்களில் ரூ. 840 அதிகரிப்பு
கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஒரு சவரன் ஆபர தங்கத்தின் விலையில் ரூ. 840 அதிகரித்துள்ளது. நாட்டின் நிலையற்ற பொருளாதார நிலை காரணமாக விலை உயர்வு காணப்படுகிறது. மேலும், தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்வதாலும் தங்கம் விலை உயர காரணமாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். நகை வாங்கும் மக்களிடையே இந்த விலை ஏற்றம் சுணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்
என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
அனாதைகள் யாருடைய குழந்தைகள்???
நன்றொன்று உண்டென்று
சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!
பணத்தை வென்ற பாசம்!
{{comments.comment}}