சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை நேற்றும் இன்றும் உயர்வை நோக்கி செல்கிறது. இது வாடிக்கையாளர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
தீபாவளி வருவதற்கு முன்னர் மக்களை படாதபாடு படுத்தி விடும் என்றால் அது மிகையில்லை எனலாம். சாமானிய மக்களிலிருந்து அனைத்து தரப்பு மக்களையும் ஒரு ஆட்டு ஆட்டிவிடும். இது வாங்கனும் அது வாங்கனும் என்று பர்சை காலியாக்கி விட்டு தான் போகும் தீபாவளி பண்டிகை.
இப்படி இருக்கும் இந்த நேரத்தில் தங்கமும் அதன் வேலையை காட்டாமல் இருக்குமா? அதுவும் அதன் பங்கிற்கு விலையை ஏற்றிவிட்டு தான் போகும். அப்படி தான் தற்பொழுது தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் கவலையில் இருந்தாலும், இவ்வளவு பணம் குடுத்து நகை வாங்கி விட்டேன் என்று பெருமை கூறுபவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர்.

\ம்ம்ம், சரி இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?.
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5715 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.60 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45720 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6235 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 17 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.49880 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.80 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 598.40 காசாக உள்ளது. தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போறது கிடையாது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சரிவில் இருந்த தங்கம் தேவை அதிகரித்ததன் காரணத்தினால் உயர்ந்து வருகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}