சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை நேற்றும் இன்றும் உயர்வை நோக்கி செல்கிறது. இது வாடிக்கையாளர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
தீபாவளி வருவதற்கு முன்னர் மக்களை படாதபாடு படுத்தி விடும் என்றால் அது மிகையில்லை எனலாம். சாமானிய மக்களிலிருந்து அனைத்து தரப்பு மக்களையும் ஒரு ஆட்டு ஆட்டிவிடும். இது வாங்கனும் அது வாங்கனும் என்று பர்சை காலியாக்கி விட்டு தான் போகும் தீபாவளி பண்டிகை.
இப்படி இருக்கும் இந்த நேரத்தில் தங்கமும் அதன் வேலையை காட்டாமல் இருக்குமா? அதுவும் அதன் பங்கிற்கு விலையை ஏற்றிவிட்டு தான் போகும். அப்படி தான் தற்பொழுது தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் கவலையில் இருந்தாலும், இவ்வளவு பணம் குடுத்து நகை வாங்கி விட்டேன் என்று பெருமை கூறுபவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர்.

\ம்ம்ம், சரி இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?.
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5715 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.60 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45720 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6235 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 17 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.49880 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.80 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 598.40 காசாக உள்ளது. தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போறது கிடையாது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சரிவில் இருந்த தங்கம் தேவை அதிகரித்ததன் காரணத்தினால் உயர்ந்து வருகிறது.
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}