கடந்த 5 வருடத்தில் எந்த ஊழியரும் ராஜினாமா செய்யவில்லை.. அசத்தும் நியூயார்க் நிறுவனம்

Jan 10, 2023,03:36 PM IST
நியூயார்க்: அய் டிஜிட்டல் என்ற நியூயார்க் நிறுவனத்தில் கடந்த  5 வருடத்தில் எந்த ஊழியரும் ராஜினாமா செய்யவில்லை என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் மக்லி கூறியுள்ளார்.



இது ஒரு விளம்பர நிறுவனமாகும். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மன நிறைவுடன், மன மகிழ்ச்சியுடன் பணியாற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதால்தான் தனது நிறுவனத்திலிருந்து யாரும் விலக விரும்புவதில்லை என்று மக்லி கூறியுள்ளார்.

பெரிய பெரிய நிறுவனங்களில்  ஊழியர்கள் கொத்துக் கொத்தாக களையெடுக்கப்பட்டு வருகின்றனர். அறிவிப்பே இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பெரிய நிறுவனங்கள் நீக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வேலையிலிருந்து யாரையும் எடுக்காமல், ஊழியர்களும் சந்தோஷமாக வேலை பார்க்கும் நிறுவனம் இருக்கிறது என்பது ஆச்சரியமானதுதான்.

இதுகுறித்து ஸ்டீபன் மக்லி மேலும் கூறுகையில், நல்ல திறமை கிடைத்தால் அதை விடக் கூடாது.  அதற்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுப்பேன். அந்தத் திறமையாளரை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வேன். எனது நிறுவனத்தின் வெற்றிக்கு எனது திறமையான பணியாளர்களே காரணம். அவர்களுக்கான ஆரோக்கியமான பணிச் சூழ்நிலையை நான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.

கொரோனா காலம் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி விட்டது. சரியான மன நலனை பேணுவது பெரும் சவாலுக்குரியதாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் எங்களது ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்தோம். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்தோம். ஒவ்வொருவருடைய பிரச்சினையையும் இணைந்து தீர்த்து வைத்தோம்.

வேலையிலும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம். விட்டுக் கொடுப்போம். ஊழியர்களாக இல்லாமல் ஒரு குடும்பமாக பழகியதால் இது சாத்தியமாயிற்று.  பணியாளர்களுக்கு மனச்சுமை இருக்கக் கூடாது. வேலைப்பளு அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது. சுதந்திரமாக அவர்களைப் பணியாற்ற விட வேண்டும். அப்போதுதான் அவர்களது வேலை சிறப்பாக இருக்கும் .

ஆரோக்கியமான சூழல் ஒரு நிறுவனத்தில் இருந்தால் அந்த நிறுவனத்துக்கும், அதன் ஊழியர்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் சிறப்பாக, வலுவாக இருக்கும், அது நீண்டு கொண்டே போகும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்