கடந்த 5 வருடத்தில் எந்த ஊழியரும் ராஜினாமா செய்யவில்லை.. அசத்தும் நியூயார்க் நிறுவனம்

Jan 10, 2023,03:36 PM IST
நியூயார்க்: அய் டிஜிட்டல் என்ற நியூயார்க் நிறுவனத்தில் கடந்த  5 வருடத்தில் எந்த ஊழியரும் ராஜினாமா செய்யவில்லை என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் மக்லி கூறியுள்ளார்.



இது ஒரு விளம்பர நிறுவனமாகும். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மன நிறைவுடன், மன மகிழ்ச்சியுடன் பணியாற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதால்தான் தனது நிறுவனத்திலிருந்து யாரும் விலக விரும்புவதில்லை என்று மக்லி கூறியுள்ளார்.

பெரிய பெரிய நிறுவனங்களில்  ஊழியர்கள் கொத்துக் கொத்தாக களையெடுக்கப்பட்டு வருகின்றனர். அறிவிப்பே இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பெரிய நிறுவனங்கள் நீக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வேலையிலிருந்து யாரையும் எடுக்காமல், ஊழியர்களும் சந்தோஷமாக வேலை பார்க்கும் நிறுவனம் இருக்கிறது என்பது ஆச்சரியமானதுதான்.

இதுகுறித்து ஸ்டீபன் மக்லி மேலும் கூறுகையில், நல்ல திறமை கிடைத்தால் அதை விடக் கூடாது.  அதற்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுப்பேன். அந்தத் திறமையாளரை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வேன். எனது நிறுவனத்தின் வெற்றிக்கு எனது திறமையான பணியாளர்களே காரணம். அவர்களுக்கான ஆரோக்கியமான பணிச் சூழ்நிலையை நான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.

கொரோனா காலம் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி விட்டது. சரியான மன நலனை பேணுவது பெரும் சவாலுக்குரியதாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் எங்களது ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்தோம். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்தோம். ஒவ்வொருவருடைய பிரச்சினையையும் இணைந்து தீர்த்து வைத்தோம்.

வேலையிலும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம். விட்டுக் கொடுப்போம். ஊழியர்களாக இல்லாமல் ஒரு குடும்பமாக பழகியதால் இது சாத்தியமாயிற்று.  பணியாளர்களுக்கு மனச்சுமை இருக்கக் கூடாது. வேலைப்பளு அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது. சுதந்திரமாக அவர்களைப் பணியாற்ற விட வேண்டும். அப்போதுதான் அவர்களது வேலை சிறப்பாக இருக்கும் .

ஆரோக்கியமான சூழல் ஒரு நிறுவனத்தில் இருந்தால் அந்த நிறுவனத்துக்கும், அதன் ஊழியர்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் சிறப்பாக, வலுவாக இருக்கும், அது நீண்டு கொண்டே போகும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்