வடகிழக்கு பருவமழை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அறிவுத்தல்கள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி

Oct 05, 2024,03:35 PM IST

சென்னை:   வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் whatsapp குழு உருவாக்கவும், தாழ்வான இடங்களில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.


மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.




இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர், பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இந்தக் கூட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த அதிக மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


அப்போது இது குறித்து அவர் பேசியதாவது,

 

 வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும்.மரம் வெட்டும் உபகரணங்களை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய whatsapp குழு ஒன்றை அமைக்க வேண்டும். மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் மற்றும் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 


பருவ மழை காலங்களில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலக்கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.


நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்