"போய் வா மழையே".. ஜனவரி 15ம் தேதியுடன் விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை!

Jan 13, 2024,05:52 PM IST
சென்னை: வட கிழக்கு பருவ மழை நாளை மறுநாள் தென் இந்திய பகுதிகளில் இருந்து விலகுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அதன் தீவிர தன்மையை காண்பித்து விட்டு சென்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதில் இருந்து முழுமையாக மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான மழையினை வட கிழக்கு மழை வாரி வழங்கியது என்று சொன்னால் அது மிகையில்லை. 

அந்தளவிற்கு வர்ண பகவான் கருணை மழையினை சற்று அதிகமாகவே பொழிந்து விட்டார். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ம் தேதியுடன் டாடா காண்பித்து விடைபெற உள்ளதாக வானிலை மையம் தகவல் தெறிவித்துள்ளது.



வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளில் இருந்து நாளை மறுநாள் விலக வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் வருகிற 19ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

குமரி கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும்  வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இனி அடுத்து வெயில் வரும்.. அதையும் சமாளிக்கணும்.. சமாளிப்போம்!

சமீபத்திய செய்திகள்

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்