சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வராமல் இருப்பதால் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது தாமதமாகிறதாம்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. இந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டுக்குப் பரவலாக அதிக அளவில் மழைப்பொழிவு கிடைக்கு். ஆனால் அக்டோபர் மாதம் தொடங்கி 12 நாட்கள் ஆன நிலையில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்கமால் உள்ளது. இதற்கு தென்மேற்கு மழை இன்னும் நிற்காமல் பெய்வது தான் காரணமாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த மாதம் 15ம் தேதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கில் வீசத்தொங்கும் காற்று நின்ற பின்னர் வடகிழக்கு திசையில் காற்று வீசத் தொடங்கிய பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு மழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. அது இருக்கட்டும்.. ஸ்கூலுக்கு லீவு விட்ற அளவுக்கு மழை பெய்யுமா இல்லையா.. அதைச் சொல்லுங்க என்று ஸ்கூல் குட்டீஸ் எல்லாம் ரொம்ப ஆர்வமாக காத்திருக்காங்க.. பார்க்கலாம்.. இந்தவாட்டி எத்தனை நாளுக்கு ஸ்கூல் லீவு கிடைக்குதுன்னு!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}