பியாங்யாங்: வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், தனது நாட்டு ராணுவத்தை போர் ஆயத்த நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் அதிகரித்துள்ளது.
போர் ஆயத்த நிலையில் இருக்குமாறு கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்த நிலையில் வட கொரிய ராணுவம் தொடர்ந்து பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேற்குக் கடற்கரையில் உள்ள நாம்போ கடற்படைத் தளத்திலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதை கிம் ஜாங் உன்னும் நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 முறை கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது வட கொரியா. வட கொரியாவின் இந்த சேட்டையை தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் தொடர்ந்து உரசல் இருந்து கொண்டே இருக்கிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக ஜப்பானும், அமெரிக்காவும் இருப்பதால் அந்த நாடுகள் மீதும் வட கொரியா ஆத்திரத்தைக் காட்டி வருகிறது. வட கொரியாவை அணு ஆயுத நாடாக மாற்றி வருகிறார் கிம் ஜாங் உன். ராணுவத்திடம் அணு ஆயுத பலம் இருக்கும் நிலையில் தற்போது கடற்படையிலும் அணு ஆயுதத்தை சேர்க்கும் வேலையை வட கொரியா தொடங்கியுள்ளது.
இதனால் இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மேலும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில்தான் போர் ஆயத்த நிலையில் தனது ராணுவம் இருக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் தென் கொரியா மீது அவர் தாக்குதலுக்கு திட்டமிடுகிறாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
கிம் அண்ணே.. சண்டையே மூண்டாலும்.. "கொரிய சீரியல்"களுக்கு எந்தப் பாதிப்பும் வராம பாத்துக்கங்க.. எங்கூர்ல நிறையப் பேரு இதுலதான் "லிவிங்ஸ்டன்"!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}