ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

Jul 01, 2025,07:10 PM IST

டெல்லி: ஜூலை மாதம் பிறந்தாச்சு. இன்று (1ம் தேதி) முதல் ATM கட்டணம், PAN கார்டு விதிமுறைகள் உட்பட பல மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. 


முக்கிய வங்கிகள் ஏடிஎம் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. புதிய பான் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் வசதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வரி செலுத்துதல், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் தனிநபர் நிதி மேலாண்மை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளின்படி, இலவச ATM பரிவர்த்தனைக்கு பிறகு கட்டணம் ₹23 ஆக இருக்கும். வங்கிகள் தங்கள் கட்டணங்களை மாற்றியமைத்துள்ளன. இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் அதன்பிறகு வசூலிக்கப்படும் கட்டணங்கள் மாறுபடும்.




பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது ATMகளில் இலவச வரம்பு முடிந்ததும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ₹15 மற்றும் GST வசூலிக்கும். மற்ற வங்கிகளின் ATMகளில் ₹21 மற்றும் GST வசூலிக்கும். ICICI வங்கி வாடிக்கையாளர்கள் ICICI ATMகளில் மாதம் ஐந்து இலவச பண பரிவர்த்தனைகள் செய்யலாம். அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 கட்டணம் வசூலிக்கப்படும். ICICI அல்லாத ATMகளில், மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள் மூன்று இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். மெட்ரோ அல்லாத பயனர்கள் ஐந்து இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். இந்த வரம்புகளை மீறினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 மற்றும் இருப்பு விசாரணைக்கு ₹8.5 கட்டணம் வசூலிக்கப்படும்.


HDFC வங்கி தனது ATMகளில் பணம் எடுத்தால் ₹23 கட்டணம் வசூலிக்கிறது. இது மற்ற வங்கிகளின் ATMகளுக்கும் பொருந்தும். Axis வங்கி அனைத்து கணக்கு வகைகளுக்கும் இலவச வரம்புக்குப் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 கட்டணம் வசூலிக்கிறது. இதில் சேமிப்பு கணக்குகள், NRI கணக்குகள், அறக்கட்டளை கணக்குகள் மற்றும் முன்னுரிமை வாடிக்கையாளர் கணக்குகள் அடங்கும். கோடக் மஹிந்திரா வங்கி இலவச ஒதுக்கீட்டிற்குப் பிறகு ஒவ்வொரு கூடுதல் பண பரிவர்த்தனைக்கும் ₹23 வசூலிக்கிறது. 


நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ₹10 வசூலிக்கிறது. யெஸ் வங்கியும் இதே முறையைப் பின்பற்றுகிறது. இலவச வரம்பு முடிந்ததும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ₹23 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ₹10 வசூலிக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு ₹23 மற்றும் இருப்பு சரிபார்ப்புக்கு ₹11 வசூலிக்கிறது.


வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணத் தேவைகளை கவனமாக திட்டமிட அறிவுறுத்துகின்றன. முடிந்தவரை தங்கள் வங்கியின் ATM நெட்வொர்க்கைப் பயன்படுத்தவும். கட்டணங்களை தவிர்க்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்துகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்