தம்பி விஜய் கூட இருக்கிற ரசிகர்களில் பாதிப் பேர்.. எனக்குதான் ஓட்டுப் போடுவாங்க.. சீமான்

Oct 29, 2024,06:45 PM IST

தேனி: விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. உண்மையில் சொல்வதானால், விஜய் ரசிகர்கள் பாதிப்பேர் எனக்கு தான் வாக்களிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாடு நடப்பதற்கு முன்னர் விஜய் ஆதரவாக பேசி வந்த சீமான்,  விஜய் மாநாட்டின் கொள்கைகளை அறிவித்த பின்னர், விஜய் கட்சி கொள்கை வேறு தங்களின் கொள்கை வேறு என்று தானும் விஜய்யும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று கூறி வருகிறார்.


இந்நிலையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைந்நாளரான சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது அவர்களது ரசிகர்களை சந்தித்து தான் அரசியலுக்கு வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்த வந்த நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களை தான் சந்தித்து அரசியலுக்கு வந்தேன்.




பொதுவாக நடிகரை சந்திக்க கூட்டம் அதிகளவில் வரும். கூட்டம் வந்ததால் அனைவரும் ஓட்டு போடுவார்கள் என்பது சந்தேகமே. விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய்யின் ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்பது விஜய்யின் பெருந்தன்மை. அதனை ஏற்று அவரது கூட்டணியில் இணைவது என்பது அவரவர் விருப்பம், எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது.


இதுவரை, திமுக, அதிமுக தனித்து போட்டியிட்டது இல்லை. ஒரே ஒரு முறை 2014 ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார். இந்தியாவில் தொடர்ச்சியாக தனித்துப் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். எங்களுடைய தனித்துவம் தனித்துவமானது என்பதால் மற்றவர்களுடன் சமரசம் செய்ய முடியாது. 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுவேன். கொள்கையிலும் சமரசம் இல்லை. 


நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டு திமுக வெற்றி பெற்று இருக்கிறது. ஏதும் பயன் இருக்கிறதா. தோற்றுப் போன எல் முருகனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்