இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

Apr 15, 2025,06:02 PM IST

சென்னை: ஜாட் திரைப்படக் குழு, ஈழ விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும்  சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.


வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில், கதைக்கு சிறிதும் தொடர்பின்றி யாழ்ப்பாணப் புலிப்படை என்று உள்நோக்கத்துடன் பெயர்வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டம் தவறானது போலவும், அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் போலவும் கட்டமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.




முழுக்க முழுக்க தமிழர்கள் மீதான இனவெறுப்பினாலேயே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதை  எளிதில் உணர முடிகிறது.  தாயகக்கனவுடன் சாவினைத் தழுவி, உலகத்தமிழர்களின் உள்ளத்தில் வைத்து வணங்கப்பெறுகின்ற எம்மாவீரத் தெய்வங்களை அவமதிப்பதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.


ஆகவே, ஜாட் திரைப்படக் குழு, ஈழ விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும்  சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.


தமிழ்நாடு அரசு கடந்த காலங்களைப்போல மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜாட் திரைப்படத்தை உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் பெரும் மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து திரையரங்குகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தும் எனவும் அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

news

கட்ட பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டார்கள்? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

news

ஐபிஎல் லைட்டை நாங்கதான் ஹேக் பண்ணோம் தெரியுமா.. காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்!

news

ரஜினிகாந்த், விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? தவாக தலைவர் வேல்முருகன்

news

2026ல் தொடங்குகிறது சென்சஸ் கணக்கெடுப்பு.. முதலில் லடாக், காஷ்மீரில் தொடங்கும்.. மத்திய அரசு

news

பாமகவின் இரு தலைவர்களும் பேச வேண்டும்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி

news

தமிழ்நாட்டை கத்தி.. அரிவாள்.. துப்பாக்கி பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

news

இஸ்ரேல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால்.. எங்களுக்காக பாகிஸ்தான் பதில் தரும்.. ஈரான்

news

இஸ்ரேலுக்கு முழுமையான பதிலடி தருவோம்.. அதுவரைக்கும் போர் நிறுத்தம் கிடையாது.. ஈரான் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்