பிளஸ்டூ முடிச்சுட்டீங்களா..  அரவிந்த் கண் மருத்துவமனையில்..  சூப்பர் ஆஃபர் காத்திருக்கு!

May 15, 2024,06:37 PM IST
மதுரை: நீங்க பிளஸ் டூ முடித்த மாணவியரா.. செவிலியர் ஆகணுமா.. அப்ப மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சூப்பரான ஆஃபர் காத்திருக்குங்க.

எல்லோருக்கும் தங்களின் எதிர்காலத்தை நினைத்து ஒரு கவலை இருக்கும். எனக்கு டாக்டர் ஆகனும்னு ஆசை. எனக்கு மருத்துவத் துறை ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு படிக்க வசதி இல்லை. ஒரு டாக்டராக முடியவில்லை என்றால் ஒரு நர்சாவது ஆகணும். அதற்கு என்ன செய்வது அப்படின்னு யோசிக்கிற மாணவர்கள் இங்கு நிறைய பேர் இருக்காங்க .அப்படி இருக்கின்ற உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்காங்க நம்ம அரவிந்த் கண் மருத்துவமனையில்

அரவிந்த் மருத்துவமனையில் ஒவ்வொரு வருடமும் இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்புகள் நடக்கும். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசம் என்பதுதான் இதன் சிறப்பம்சமே. இதில் மாணவியர் மட்டுமே சேரலாம். வயது வரம்பு 19 ஆகும்.

சேருவதற்கு தகுதி:  



நீங்க பிளஸ் டூ முடித்து இருந்தீங்கன்னா அப்போ உடனே இந்த பயிற்சியில் சேரலாம். பணிக்காக இந்த பயிற்சியில் சேர்ந்த ஒவ்வொரு மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆனால் இதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது. இந்த இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி முடித்த பின் கண்டிப்பாக அரவிந்த் ஹாஸ்பிடலில் மூன்று ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்யும் இந்த மூன்றாண்டு காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க நினைக்கிறீர்களா? அப்ப உடனே விண்ணப்பியுங்கள்


தபால் மூலம் விண்ணப்பிக்க

அரவிந்த் கண் மருத்துவமனையில்  இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 30 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறும். 

நேர்முகத்தேர்வின்போது நீங்கள் கொண்டு வர வேண்டியது:

plus two marksheet (original +xerox copy)
Aadhar Card (original+xerox copy)
Transfer certificate ( TC)-(original+ xerox copy)

பிறகென்ன மாணவியரே உடனே விண்ணப்பிங்க.

சமீபத்திய செய்திகள்

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்