பிளஸ்டூ முடிச்சுட்டீங்களா..  அரவிந்த் கண் மருத்துவமனையில்..  சூப்பர் ஆஃபர் காத்திருக்கு!

May 15, 2024,06:37 PM IST
மதுரை: நீங்க பிளஸ் டூ முடித்த மாணவியரா.. செவிலியர் ஆகணுமா.. அப்ப மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சூப்பரான ஆஃபர் காத்திருக்குங்க.

எல்லோருக்கும் தங்களின் எதிர்காலத்தை நினைத்து ஒரு கவலை இருக்கும். எனக்கு டாக்டர் ஆகனும்னு ஆசை. எனக்கு மருத்துவத் துறை ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு படிக்க வசதி இல்லை. ஒரு டாக்டராக முடியவில்லை என்றால் ஒரு நர்சாவது ஆகணும். அதற்கு என்ன செய்வது அப்படின்னு யோசிக்கிற மாணவர்கள் இங்கு நிறைய பேர் இருக்காங்க .அப்படி இருக்கின்ற உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்காங்க நம்ம அரவிந்த் கண் மருத்துவமனையில்

அரவிந்த் மருத்துவமனையில் ஒவ்வொரு வருடமும் இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்புகள் நடக்கும். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசம் என்பதுதான் இதன் சிறப்பம்சமே. இதில் மாணவியர் மட்டுமே சேரலாம். வயது வரம்பு 19 ஆகும்.

சேருவதற்கு தகுதி:  



நீங்க பிளஸ் டூ முடித்து இருந்தீங்கன்னா அப்போ உடனே இந்த பயிற்சியில் சேரலாம். பணிக்காக இந்த பயிற்சியில் சேர்ந்த ஒவ்வொரு மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆனால் இதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது. இந்த இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி முடித்த பின் கண்டிப்பாக அரவிந்த் ஹாஸ்பிடலில் மூன்று ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்யும் இந்த மூன்றாண்டு காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க நினைக்கிறீர்களா? அப்ப உடனே விண்ணப்பியுங்கள்


தபால் மூலம் விண்ணப்பிக்க

அரவிந்த் கண் மருத்துவமனையில்  இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 30 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறும். 

நேர்முகத்தேர்வின்போது நீங்கள் கொண்டு வர வேண்டியது:

plus two marksheet (original +xerox copy)
Aadhar Card (original+xerox copy)
Transfer certificate ( TC)-(original+ xerox copy)

பிறகென்ன மாணவியரே உடனே விண்ணப்பிங்க.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்