பிளஸ்டூ முடிச்சுட்டீங்களா..  அரவிந்த் கண் மருத்துவமனையில்..  சூப்பர் ஆஃபர் காத்திருக்கு!

May 15, 2024,06:37 PM IST
மதுரை: நீங்க பிளஸ் டூ முடித்த மாணவியரா.. செவிலியர் ஆகணுமா.. அப்ப மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சூப்பரான ஆஃபர் காத்திருக்குங்க.

எல்லோருக்கும் தங்களின் எதிர்காலத்தை நினைத்து ஒரு கவலை இருக்கும். எனக்கு டாக்டர் ஆகனும்னு ஆசை. எனக்கு மருத்துவத் துறை ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு படிக்க வசதி இல்லை. ஒரு டாக்டராக முடியவில்லை என்றால் ஒரு நர்சாவது ஆகணும். அதற்கு என்ன செய்வது அப்படின்னு யோசிக்கிற மாணவர்கள் இங்கு நிறைய பேர் இருக்காங்க .அப்படி இருக்கின்ற உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்காங்க நம்ம அரவிந்த் கண் மருத்துவமனையில்

அரவிந்த் மருத்துவமனையில் ஒவ்வொரு வருடமும் இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்புகள் நடக்கும். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசம் என்பதுதான் இதன் சிறப்பம்சமே. இதில் மாணவியர் மட்டுமே சேரலாம். வயது வரம்பு 19 ஆகும்.

சேருவதற்கு தகுதி:  



நீங்க பிளஸ் டூ முடித்து இருந்தீங்கன்னா அப்போ உடனே இந்த பயிற்சியில் சேரலாம். பணிக்காக இந்த பயிற்சியில் சேர்ந்த ஒவ்வொரு மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆனால் இதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது. இந்த இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி முடித்த பின் கண்டிப்பாக அரவிந்த் ஹாஸ்பிடலில் மூன்று ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்யும் இந்த மூன்றாண்டு காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க நினைக்கிறீர்களா? அப்ப உடனே விண்ணப்பியுங்கள்


தபால் மூலம் விண்ணப்பிக்க

அரவிந்த் கண் மருத்துவமனையில்  இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 30 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறும். 

நேர்முகத்தேர்வின்போது நீங்கள் கொண்டு வர வேண்டியது:

plus two marksheet (original +xerox copy)
Aadhar Card (original+xerox copy)
Transfer certificate ( TC)-(original+ xerox copy)

பிறகென்ன மாணவியரே உடனே விண்ணப்பிங்க.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்