விசுவாசு வருடம் 20 25 அக்டோபர் முதல் நாளே மிகவும் விசேஷமான சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையின் துவக்கமாக மிகச் சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி அமைந்துள்ளது இம்மாதத்தின் துவக்கமே மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் மாதம் பெயர் காரணம்:
அக்டோபர் மாதம் என்பது க்ரிகோரியன் நாட்காட்டிகளில் 31 நாட்கள் கொண்ட பத்தாவது மாதம் ஆகும். அக்டோபர் என்ற பெயர்
லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் 8 என்று அர்த்தத்தைக் கொண்ட "அக்டோ " (octo) என்ற சொல்லிலிருந்து வந்தது. ஏனெனில் பண்டைய உரோம நாட்காட்டிகள் இது எட்டாவது மாதமாக இருந்தது.
அக்டோபர் மாதம் வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர் காலத்துடனும் தெற்கு அரைக்கோளத்தில் இளவேனிற் காலத்துடனும் தொடர்புடையது. அக்டோபர் மாதம் பண்டிகைகள், விடுமுறைகள் மற்றும் கலாச்சார கொண்டாட்டங்கள் நிறைந்த மாதமாகும்.

அக்டோபர் 2 இரண்டாம் நாள் இன்று விஜயதசமி. குரு ( வியாழக்கிழமை) வாரம் விஜயதசமி நாளன்று பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்திருப்பது மிகவும் விசேஷமான நாளாகும். இந்த நாளை தசரா என்று ராவணனை ராமர் வென்றதை குறிக்கும் ஒரு விசேஷமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மற்றும் மகிஷாசுரனை துர்கா தேவி வென்றதையும், நவராத்திரியின் முடிவையும் குறிக்கும் விதமாக "தசரா "என்பது தீமையை நன்மை வென்றதை குறிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் சில மாநிலங்களில் ஊர்வலங்கள் மூலம் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி,துர்க்கை சிலைகளை அருகில் உள்ள ஆறுகள் அல்லது பெருங்கடல்களுக்கு எடுத்துச் சென்று நீரில் விட்டு வழிபடுகிறார்கள். மேலும் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு சில மாநிலங்களில் கொண்டாடப்படுகின்றன. கர்நாடகாவில் தசரா கொண்டாடும் பாரம்பரியம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூர் நகரின் முழு அரண்மனையையும் விஜயதசமி கொண்டாட்டத்திற்கு பத்து நாட்களும் மிகவும் ஒளிமயமான விளக்குகளால் ஒவ்வொரு ஆண்டும் அலங்கரிக்கப்படுவது வழக்கம். காணவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். டெல்லி, வாரணாசி இடங்களில் "ராம்லீலா "நிகழ்ச்சிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு "வித்யா ரம்பம்" செய்வது சிறப்பு. இந்த நாள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது, புதிய தொழில் தொடங்குவது சிறப்பாக அமையும்.
மேலும் அக்டோபர் மாதம் முழுவதும் உள்ள சிறப்பான நாட்கள்:
அக்டோபர் 2 :விஜயதசமி, தசரா,காந்தி ஜெயந்தி, சர்வதேச வன்முறையற்ற தினம்.
அக்டோபர் 3 : உலக புன்னகை தினம்
அக்டோபர் 5: உலக ஆசிரியர் தினம்.
அக்டோபர் 7: மகரிஷி வால்மீகி ஜெயந்தி.
அக்டோபர் 10 : தேசிய அஞ்சல் தினம்.
அக்டோபர் 11 : சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.
அக்டோபர் 16: உலக உணவு தினம் .
அக்டோபர் 20: தீபாவளி பண்டிகை.
அக்டோபர் 22: மகா கந்த சஷ்டி விரதம் தொடக்கம்
அக்டோபர் 27: சூரசம்காரம்
அக்டோபர் 28: முருகப்பெருமான் தெய்வானை திருமணம் நடைபெறும் நாள்.
அக்டோபர் 31 :ஹாலோவீன் தினம்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த அக்டோபர் மாதம் அனைவருக்கும் எல்லா வளங்களும் நலங்களும் கிடைக்க பெறுவோமாக. மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
{{comments.comment}}