கண்டி: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்ட கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை.
இந்தியாவில், அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை 13வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணியின் தொடக்கம் ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. அதில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.
இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (செப்.,5) அறிவிக்கப்பட்டது. இலங்கையின் கண்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள கே.எல் ராகுல் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் தேர்வு செய்யப்படுவதால், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}