கண்டி: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்ட கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை.
இந்தியாவில், அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை 13வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணியின் தொடக்கம் ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. அதில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.
இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (செப்.,5) அறிவிக்கப்பட்டது. இலங்கையின் கண்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள கே.எல் ராகுல் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் தேர்வு செய்யப்படுவதால், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}