என் இதயத்தில் கலந்த தோழியே.. நன்றி!

Jan 09, 2026,03:57 PM IST

- கவிதா அறிவழகன்


என் இதயத்தில் கலந்த தோழிக்கு,

உனக்காக ஒரு பக்கம் எழுதுவது

சில வரிகளில் முடியாதது,

ஏனெனில் 

என் வாழ்க்கையின் பல பக்கங்களில்

என் ஆன்மாவோடு கலந்து

நீ நின்றிருக்கிறாய்.

என் சிரிப்பிற்கு




காரணம் தேவைப்படாத நாட்களிலும்,

என் கண்ணீருக்கு

விளக்கம் தேவைப்பட்ட இரவுகளிலும்,

என்னோடு இருந்தது

நீயே.

உலகம் என்னிடம்

“மாறிவிடு” என்று சொன்னபோது,

நீ மட்டும்

“நீ மாறாதே…

நீ இப்படியே இரு”

என்று சொன்னாய்.

மனதின் பலம்

என்னை விட்டு விலகிய நாட்களிலும்,

எனக்கு

வழித்துணையாகவும்

வழிகாட்டியாகவும்

நீ நின்றாய்.

உன்னுடைய

ஒவ்வொரு வார்த்தையும்

தெளிந்த நீரோடையாய்

என் மனதை

ஆறுதல் செய்தது.

உன்னுடைய

ஒவ்வொரு அனுசரணையும்

தென்றல் காற்றாய்

என்னை மெதுவாகத் தழுவியது.

உன்னுடைய நம்பிக்கையே

என்னுடைய கண்ணாடியாக மாறி,

அதில்

நான் என்னை

போதுமானவளாகக் கண்டேன்

இந்தப் பக்கம்

ஒரு எழுத்து அல்ல,

ஒரு நன்றி.

ஒரு அமைதி.

ஒரு வாழ்நாள் நட்பின்

மௌனமான உறுதி.

இந்த வாழ்க்கையில்

நான் எவ்வளவு தூரம் சென்றாலும்,

என் உள்ளத்தின் முகவரியில்

உன் பெயர் செதுக்கப்பட்டு

என்றென்றும் இருக்கும்.


(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்