என் இதயத்தில் கலந்த தோழியே.. நன்றி!

Jan 09, 2026,03:57 PM IST

- கவிதா அறிவழகன்


என் இதயத்தில் கலந்த தோழிக்கு,

உனக்காக ஒரு பக்கம் எழுதுவது

சில வரிகளில் முடியாதது,

ஏனெனில் 

என் வாழ்க்கையின் பல பக்கங்களில்

என் ஆன்மாவோடு கலந்து

நீ நின்றிருக்கிறாய்.

என் சிரிப்பிற்கு




காரணம் தேவைப்படாத நாட்களிலும்,

என் கண்ணீருக்கு

விளக்கம் தேவைப்பட்ட இரவுகளிலும்,

என்னோடு இருந்தது

நீயே.

உலகம் என்னிடம்

“மாறிவிடு” என்று சொன்னபோது,

நீ மட்டும்

“நீ மாறாதே…

நீ இப்படியே இரு”

என்று சொன்னாய்.

மனதின் பலம்

என்னை விட்டு விலகிய நாட்களிலும்,

எனக்கு

வழித்துணையாகவும்

வழிகாட்டியாகவும்

நீ நின்றாய்.

உன்னுடைய

ஒவ்வொரு வார்த்தையும்

தெளிந்த நீரோடையாய்

என் மனதை

ஆறுதல் செய்தது.

உன்னுடைய

ஒவ்வொரு அனுசரணையும்

தென்றல் காற்றாய்

என்னை மெதுவாகத் தழுவியது.

உன்னுடைய நம்பிக்கையே

என்னுடைய கண்ணாடியாக மாறி,

அதில்

நான் என்னை

போதுமானவளாகக் கண்டேன்

இந்தப் பக்கம்

ஒரு எழுத்து அல்ல,

ஒரு நன்றி.

ஒரு அமைதி.

ஒரு வாழ்நாள் நட்பின்

மௌனமான உறுதி.

இந்த வாழ்க்கையில்

நான் எவ்வளவு தூரம் சென்றாலும்,

என் உள்ளத்தின் முகவரியில்

உன் பெயர் செதுக்கப்பட்டு

என்றென்றும் இருக்கும்.


(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்