- கவிதா அறிவழகன்
என் இதயத்தில் கலந்த தோழிக்கு,
உனக்காக ஒரு பக்கம் எழுதுவது
சில வரிகளில் முடியாதது,
ஏனெனில்
என் வாழ்க்கையின் பல பக்கங்களில்
என் ஆன்மாவோடு கலந்து
நீ நின்றிருக்கிறாய்.
என் சிரிப்பிற்கு

காரணம் தேவைப்படாத நாட்களிலும்,
என் கண்ணீருக்கு
விளக்கம் தேவைப்பட்ட இரவுகளிலும்,
என்னோடு இருந்தது
நீயே.
உலகம் என்னிடம்
“மாறிவிடு” என்று சொன்னபோது,
நீ மட்டும்
“நீ மாறாதே…
நீ இப்படியே இரு”
என்று சொன்னாய்.
மனதின் பலம்
என்னை விட்டு விலகிய நாட்களிலும்,
எனக்கு
வழித்துணையாகவும்
வழிகாட்டியாகவும்
நீ நின்றாய்.
உன்னுடைய
ஒவ்வொரு வார்த்தையும்
தெளிந்த நீரோடையாய்
என் மனதை
ஆறுதல் செய்தது.
உன்னுடைய
ஒவ்வொரு அனுசரணையும்
தென்றல் காற்றாய்
என்னை மெதுவாகத் தழுவியது.
உன்னுடைய நம்பிக்கையே
என்னுடைய கண்ணாடியாக மாறி,
அதில்
நான் என்னை
போதுமானவளாகக் கண்டேன்
இந்தப் பக்கம்
ஒரு எழுத்து அல்ல,
ஒரு நன்றி.
ஒரு அமைதி.
ஒரு வாழ்நாள் நட்பின்
மௌனமான உறுதி.
நான் எவ்வளவு தூரம் சென்றாலும்,
என் உள்ளத்தின் முகவரியில்
உன் பெயர் செதுக்கப்பட்டு
என்றென்றும் இருக்கும்.
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}