- கவிதா அறிவழகன்
என் இதயத்தில் கலந்த தோழிக்கு,
உனக்காக ஒரு பக்கம் எழுதுவது
சில வரிகளில் முடியாதது,
ஏனெனில்
என் வாழ்க்கையின் பல பக்கங்களில்
என் ஆன்மாவோடு கலந்து
நீ நின்றிருக்கிறாய்.
என் சிரிப்பிற்கு

காரணம் தேவைப்படாத நாட்களிலும்,
என் கண்ணீருக்கு
விளக்கம் தேவைப்பட்ட இரவுகளிலும்,
என்னோடு இருந்தது
நீயே.
உலகம் என்னிடம்
“மாறிவிடு” என்று சொன்னபோது,
நீ மட்டும்
“நீ மாறாதே…
நீ இப்படியே இரு”
என்று சொன்னாய்.
மனதின் பலம்
என்னை விட்டு விலகிய நாட்களிலும்,
எனக்கு
வழித்துணையாகவும்
வழிகாட்டியாகவும்
நீ நின்றாய்.
உன்னுடைய
ஒவ்வொரு வார்த்தையும்
தெளிந்த நீரோடையாய்
என் மனதை
ஆறுதல் செய்தது.
உன்னுடைய
ஒவ்வொரு அனுசரணையும்
தென்றல் காற்றாய்
என்னை மெதுவாகத் தழுவியது.
உன்னுடைய நம்பிக்கையே
என்னுடைய கண்ணாடியாக மாறி,
அதில்
நான் என்னை
போதுமானவளாகக் கண்டேன்
இந்தப் பக்கம்
ஒரு எழுத்து அல்ல,
ஒரு நன்றி.
ஒரு அமைதி.
ஒரு வாழ்நாள் நட்பின்
மௌனமான உறுதி.
நான் எவ்வளவு தூரம் சென்றாலும்,
என் உள்ளத்தின் முகவரியில்
உன் பெயர் செதுக்கப்பட்டு
என்றென்றும் இருக்கும்.
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}