- கவிதா அறிவழகன்
என் இதயத்தில் கலந்த தோழிக்கு,
உனக்காக ஒரு பக்கம் எழுதுவது
சில வரிகளில் முடியாதது,
ஏனெனில்
என் வாழ்க்கையின் பல பக்கங்களில்
என் ஆன்மாவோடு கலந்து
நீ நின்றிருக்கிறாய்.
என் சிரிப்பிற்கு

காரணம் தேவைப்படாத நாட்களிலும்,
என் கண்ணீருக்கு
விளக்கம் தேவைப்பட்ட இரவுகளிலும்,
என்னோடு இருந்தது
நீயே.
உலகம் என்னிடம்
“மாறிவிடு” என்று சொன்னபோது,
நீ மட்டும்
“நீ மாறாதே…
நீ இப்படியே இரு”
என்று சொன்னாய்.
மனதின் பலம்
என்னை விட்டு விலகிய நாட்களிலும்,
எனக்கு
வழித்துணையாகவும்
வழிகாட்டியாகவும்
நீ நின்றாய்.
உன்னுடைய
ஒவ்வொரு வார்த்தையும்
தெளிந்த நீரோடையாய்
என் மனதை
ஆறுதல் செய்தது.
உன்னுடைய
ஒவ்வொரு அனுசரணையும்
தென்றல் காற்றாய்
என்னை மெதுவாகத் தழுவியது.
உன்னுடைய நம்பிக்கையே
என்னுடைய கண்ணாடியாக மாறி,
அதில்
நான் என்னை
போதுமானவளாகக் கண்டேன்
இந்தப் பக்கம்
ஒரு எழுத்து அல்ல,
ஒரு நன்றி.
ஒரு அமைதி.
ஒரு வாழ்நாள் நட்பின்
மௌனமான உறுதி.
நான் எவ்வளவு தூரம் சென்றாலும்,
என் உள்ளத்தின் முகவரியில்
உன் பெயர் செதுக்கப்பட்டு
என்றென்றும் இருக்கும்.
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)
பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
{{comments.comment}}