- கவிதா அறிவழகன்
என் இதயத்தில் கலந்த தோழிக்கு,
உனக்காக ஒரு பக்கம் எழுதுவது
சில வரிகளில் முடியாதது,
ஏனெனில்
என் வாழ்க்கையின் பல பக்கங்களில்
என் ஆன்மாவோடு கலந்து
நீ நின்றிருக்கிறாய்.
என் சிரிப்பிற்கு

காரணம் தேவைப்படாத நாட்களிலும்,
என் கண்ணீருக்கு
விளக்கம் தேவைப்பட்ட இரவுகளிலும்,
என்னோடு இருந்தது
நீயே.
உலகம் என்னிடம்
“மாறிவிடு” என்று சொன்னபோது,
நீ மட்டும்
“நீ மாறாதே…
நீ இப்படியே இரு”
என்று சொன்னாய்.
மனதின் பலம்
என்னை விட்டு விலகிய நாட்களிலும்,
எனக்கு
வழித்துணையாகவும்
வழிகாட்டியாகவும்
நீ நின்றாய்.
உன்னுடைய
ஒவ்வொரு வார்த்தையும்
தெளிந்த நீரோடையாய்
என் மனதை
ஆறுதல் செய்தது.
உன்னுடைய
ஒவ்வொரு அனுசரணையும்
தென்றல் காற்றாய்
என்னை மெதுவாகத் தழுவியது.
உன்னுடைய நம்பிக்கையே
என்னுடைய கண்ணாடியாக மாறி,
அதில்
நான் என்னை
போதுமானவளாகக் கண்டேன்
இந்தப் பக்கம்
ஒரு எழுத்து அல்ல,
ஒரு நன்றி.
ஒரு அமைதி.
ஒரு வாழ்நாள் நட்பின்
மௌனமான உறுதி.
நான் எவ்வளவு தூரம் சென்றாலும்,
என் உள்ளத்தின் முகவரியில்
உன் பெயர் செதுக்கப்பட்டு
என்றென்றும் இருக்கும்.
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}