ஒலிம்பிக்கில் பதக்கம் தட்டிய.. இந்திய வீரர்களுக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு!

Aug 16, 2024,05:09 PM IST

டெல்லி:  2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


பாரிஸில் நடந்த ஒலிம்பிக் ஆடவருக்கான  57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் வீரர் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அமன் பெற்றுள்ளார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமன் 61.5 கிலோ எடை இருந்துள்ளார்  இது இவர் இருக்க வேண்டிய எடையை விட கிட்டதட்ட 4.6 கிலோ எடை அதிகமாகும். இந்த அதிகப்படியான எடையை 10 மணி நேரம் உடற்பயிற்சி செய்து குறைத்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியவர் இந்த அமன். 




அவர் பட்ட கஷ்டத்தின் பலனாக ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றார். நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக  அமனுக்கு இந்திய ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


இது குறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷூ உபாத்யாய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரரான அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையையும் புகழையும் கொண்டு சேர்த்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறது என்றார்.


அதேபோல பதக்கம் வென்ற இன்னொரு வீரரான ஸ்வப்னில் குசேலுக்கும் ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரராவார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்