ஒலிம்பிக்கில் பதக்கம் தட்டிய.. இந்திய வீரர்களுக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு!

Aug 16, 2024,05:09 PM IST

டெல்லி:  2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


பாரிஸில் நடந்த ஒலிம்பிக் ஆடவருக்கான  57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் வீரர் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அமன் பெற்றுள்ளார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமன் 61.5 கிலோ எடை இருந்துள்ளார்  இது இவர் இருக்க வேண்டிய எடையை விட கிட்டதட்ட 4.6 கிலோ எடை அதிகமாகும். இந்த அதிகப்படியான எடையை 10 மணி நேரம் உடற்பயிற்சி செய்து குறைத்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியவர் இந்த அமன். 




அவர் பட்ட கஷ்டத்தின் பலனாக ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றார். நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக  அமனுக்கு இந்திய ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


இது குறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷூ உபாத்யாய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரரான அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையையும் புகழையும் கொண்டு சேர்த்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறது என்றார்.


அதேபோல பதக்கம் வென்ற இன்னொரு வீரரான ஸ்வப்னில் குசேலுக்கும் ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரராவார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்