சென்னை: விழாக்காலங்கள் வந்து விட்டாலே போதும்.. "சின்ராசு"களாக மாறி விடுகின்றன நம்ம ஊர் ஆம்னி பஸ்கள். அவர்கள் வைப்பதுதான் கட்டணம்.. அவர்கள் சொல்வதுதான் என்று மாறி விடுவதால் மக்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த நிலையில்தான் அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததைத் தொடர்ந்து தற்போது சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்.
அரசுப் பேருந்துகளை விட சிறந்த வசதிகள், சீக்கிரம் போய் விடுவது, அலுப்பு தெரியாமல் பயணிப்பது என்று பல்வேறு காரணங்களுக்காக ஆம்னி பஸ்களை பலர் தேர்வு செய்கின்றனர். ஆனால் சாதாரண காலத்தை விட திருவிழாக் காலங்கள், தொடர் விடுமுறைக் காலங்களில் மிக மிக அதிகமாக ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் சாதாரண மக்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.
மேலும் ஆம்னி பஸ்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தபடியே இருக்கிறது. இந்த நிலையில்தான் வெளி மாநிலங்களில் குறிப்பாக நாகாலாந்து, அருணாச்சல் பிரதேச மாநிலங்களில் பதிவு செய்த வாகனங்களை அதிக அளவில் தமிழ்நாட்டில் பயன்படுத்த ஆரம்பித்தனர் ஆம்னி பஸ் உரிமையாளர்கள். அந்தப் பேருந்துகளைப் பறிமுதல் செய்து அரசு நடவடிக்கை எடுத்தது.
இதைக் கண்டித்து நேற்று ஸ்டிரைக் செய்யப் போவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டிரைக் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கான கட்டண விகிதத்தை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதை அனைத்து பஸ் உரிமையாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காதவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ள கட்டண விகிதம்:
சென்னையிலிருந்து...
மதுரை - குறைந்தபட்சம் ரூ. 1930, அதிகபட்சம் ரூ. 3070
திருச்சி - குறைந்தபட்சம் ரூ. 1610, அதிகபட்சம் ரூ. 2430
கோயம்புத்தூர் - குறைந்தபட்சம் ரூ. 2050, அதிகபட்சம் ரூ. 3310
தூத்துக்குடி - குறைந்தபட்சம் ரூ. 2320, அதிகபட்சம் ரூ. 3810
திருநெல்வேலி - குறைந்தபட்சம் ரூ. 2380, அதிகபட்சம் ரூ. 3920
சேலம் மற்றும் தஞ்சாவூர் - குறைந்தபட்சம் ரூ. 1650, அதிகபட்சம் ரூ. 2500
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}