இன்னும் சில வாரங்களில் வட கிழக்குப் பருவ மழை.. சென்னை ஏரிகளில் தண்ணீர் எவ்வளவு உள்ளது?

Oct 07, 2024,10:24 AM IST

சென்னை:   வட கடலோர பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் உள்ள 5 முக்கிய ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து தற்போது 32.19 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. வட கிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஏரிகளின் நீர் இருப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நீடித்து வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. 




இதற்கிடையே இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதனால் வடகடலோர  மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள  முக்கிய ஏரிகளில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சென்னைக்கு நீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏழில் நீர்  நீர் இருப்பு 32.19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.


ஏரிகளின் நீர் இருப்பு (சதவிகிதத்தில்): 


அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தக் கொள்ளளவில் 31.82 சதவீதமும், புழல் ஏரியில் 62.88 சதவீதமும், பூண்டியில் 6.44 சதவீதமும், சோழவரத்தில் 5.73 சதவிகிதமும், கண்ணன் கோட்டையில் 58.4 சதவிகிதமும் நீர் இருப்பு உள்ளது.


குடிநீர் தேவைக்காக நீர் வெளியேற்றம்:


புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இதில் நீர் இருப்பு தற்போது 2075 மில்லியன் கன அடியாக உள்ளது. இதிலிருந்து குடிநீர் தேவைக்காக 184 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் 1081  கனஅடி கொள்ளளவு கொண்ட சோழபுரம் ஏரியில் 62 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி கொண்ட கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 292 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்