சென்னை: வட கடலோர பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் உள்ள 5 முக்கிய ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து தற்போது 32.19 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. வட கிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஏரிகளின் நீர் இருப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நீடித்து வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சென்னைக்கு நீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏழில் நீர் நீர் இருப்பு 32.19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஏரிகளின் நீர் இருப்பு (சதவிகிதத்தில்):
அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தக் கொள்ளளவில் 31.82 சதவீதமும், புழல் ஏரியில் 62.88 சதவீதமும், பூண்டியில் 6.44 சதவீதமும், சோழவரத்தில் 5.73 சதவிகிதமும், கண்ணன் கோட்டையில் 58.4 சதவிகிதமும் நீர் இருப்பு உள்ளது.
குடிநீர் தேவைக்காக நீர் வெளியேற்றம்:
புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இதில் நீர் இருப்பு தற்போது 2075 மில்லியன் கன அடியாக உள்ளது. இதிலிருந்து குடிநீர் தேவைக்காக 184 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் 1081 கனஅடி கொள்ளளவு கொண்ட சோழபுரம் ஏரியில் 62 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி கொண்ட கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 292 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}