சென்னை: சென்னையிலிருந்து நெல்லை செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், ஒரு வழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இன்று இரவு இயக்கவுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வரையிலான இந்த ஒரு வழி சிறப்பு ரயிலானது, நெல்லைக்கு மட்டும் இயக்கப்படும். நெல்லையிலிருந்து சென்னைக்கு மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில் கிடையாது.
06083 என்ற எண்ணுடைய இந்த சிறப்பு ரயிலானது, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து 19ம் தேதி அதாவது இன்று இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு மறு நாள் முற்பகல் 11.20 மணிக்கு நெல்லையை சென்றடையும். மொத்தம் 16 தூங்கும் வசதி மற்றும் 2 செகன்ட் கிளாஸ் லக்கேஜ் வசதியுடன் கூடிய ரயிலாக இது இயக்கப்படும்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று நெல்லையை வந்தடையும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}