சென்னை: சென்னையிலிருந்து நெல்லை செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், ஒரு வழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இன்று இரவு இயக்கவுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வரையிலான இந்த ஒரு வழி சிறப்பு ரயிலானது, நெல்லைக்கு மட்டும் இயக்கப்படும். நெல்லையிலிருந்து சென்னைக்கு மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில் கிடையாது.

06083 என்ற எண்ணுடைய இந்த சிறப்பு ரயிலானது, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து 19ம் தேதி அதாவது இன்று இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு மறு நாள் முற்பகல் 11.20 மணிக்கு நெல்லையை சென்றடையும். மொத்தம் 16 தூங்கும் வசதி மற்றும் 2 செகன்ட் கிளாஸ் லக்கேஜ் வசதியுடன் கூடிய ரயிலாக இது இயக்கப்படும்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று நெல்லையை வந்தடையும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}