சென்னை: சென்னையிலிருந்து நெல்லை செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், ஒரு வழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இன்று இரவு இயக்கவுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வரையிலான இந்த ஒரு வழி சிறப்பு ரயிலானது, நெல்லைக்கு மட்டும் இயக்கப்படும். நெல்லையிலிருந்து சென்னைக்கு மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில் கிடையாது.

06083 என்ற எண்ணுடைய இந்த சிறப்பு ரயிலானது, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து 19ம் தேதி அதாவது இன்று இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு மறு நாள் முற்பகல் 11.20 மணிக்கு நெல்லையை சென்றடையும். மொத்தம் 16 தூங்கும் வசதி மற்றும் 2 செகன்ட் கிளாஸ் லக்கேஜ் வசதியுடன் கூடிய ரயிலாக இது இயக்கப்படும்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று நெல்லையை வந்தடையும்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}