ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி... இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் அதிரடி உயர்வு!

May 07, 2025,11:51 AM IST

மும்பை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு காணப்பட்டது.


மே 7 அன்று பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீரிலும் (PoK) இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலை இந்தியப் படைகள் நடத்தியுள்ளன. இதன் எதிரொலியாக பாதுகாப்புத் துறை பங்குகள் புதன்கிழமை உயர்வு கண்டன.


இந்த தாக்குதல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக அமைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து அவற்றின் மதிப்பு உயர்ந்துள்ளது. Mazagon Dock Shipbuilders பங்கு மதிப்பு 1.92% உயர்ந்து ரூ.3,029.60 ஆக இருந்தது. Data Patterns (India) Ltd நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.56% உயர்ந்து ரூ.2,229 ஆக இருந்தது. இதேபோல Cochin Shipyard Ltd. நிறுவனத்தின் பங்கு 0.77% உயர்ந்து ரூ.1,494.10 ஆக இருந்தது. Hindustan Aeronautics Ltd. (HAL) நிறுவனத்தின் பங்கு 0.33% உயர்ந்து ரூ.4,522.00 ஆக இருந்தது. Bharat Dynamics Ltd. நிறுவனத்தின் பங்கு 0.10% உயர்ந்து ரூ.1,529.20 ஆக இருந்தது. இது முக்கியமான ஆயுதங்களை வழங்கும் நிறுவனம்.




மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் வர்த்தக தொடக்கத்தில் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீண்டு 150 புள்ளிகள் உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டியிலும், 24,400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வங்கி, பாதுகாப்பு மற்றும் வாகனத் துறை பங்குகள் இதற்கு உதவின.


ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத் துறை பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைகளில் பதற்றம் அதிகரித்தால் பாதுகாப்புக்கான செலவுகள் கூடும். இதனால் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நீண்ட காலத்திற்கு ஆர்டர்கள் கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!

news

Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?

news

4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!

news

மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!

news

ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!

news

இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!

news

IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!

news

சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!

அதிகம் பார்க்கும் செய்திகள்