மும்பை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு காணப்பட்டது.
மே 7 அன்று பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK) இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலை இந்தியப் படைகள் நடத்தியுள்ளன. இதன் எதிரொலியாக பாதுகாப்புத் துறை பங்குகள் புதன்கிழமை உயர்வு கண்டன.
இந்த தாக்குதல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக அமைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து அவற்றின் மதிப்பு உயர்ந்துள்ளது. Mazagon Dock Shipbuilders பங்கு மதிப்பு 1.92% உயர்ந்து ரூ.3,029.60 ஆக இருந்தது. Data Patterns (India) Ltd நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.56% உயர்ந்து ரூ.2,229 ஆக இருந்தது. இதேபோல Cochin Shipyard Ltd. நிறுவனத்தின் பங்கு 0.77% உயர்ந்து ரூ.1,494.10 ஆக இருந்தது. Hindustan Aeronautics Ltd. (HAL) நிறுவனத்தின் பங்கு 0.33% உயர்ந்து ரூ.4,522.00 ஆக இருந்தது. Bharat Dynamics Ltd. நிறுவனத்தின் பங்கு 0.10% உயர்ந்து ரூ.1,529.20 ஆக இருந்தது. இது முக்கியமான ஆயுதங்களை வழங்கும் நிறுவனம்.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் வர்த்தக தொடக்கத்தில் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீண்டு 150 புள்ளிகள் உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டியிலும், 24,400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வங்கி, பாதுகாப்பு மற்றும் வாகனத் துறை பங்குகள் இதற்கு உதவின.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத் துறை பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைகளில் பதற்றம் அதிகரித்தால் பாதுகாப்புக்கான செலவுகள் கூடும். இதனால் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நீண்ட காலத்திற்கு ஆர்டர்கள் கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள்.
Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்
திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்கும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சாலையோரங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம்: தவெக!
Chennai metro: சென்னையில் விரைவில்... பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்!
வைட்டமின் சி ரொம்ப ரொம்ப முக்கியம்.. எதற்காக தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்?
மும்பையில் வீடு வாங்கணுமா?.. அப்டின்னா நீங்க இன்னும் 100 வருடங்கள் சேமிக்கணும்!
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. சாகாவரம் படைத்த கண்ணதாசன்!
சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? டாக்டர் அன்புமணி கேள்வி!
போலிப் பாசம் தமிழுக்கு... பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}