கேட்ட தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல்.. அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்.. அவசர ஆலோசனை!

Mar 21, 2024,12:28 PM IST

சென்னை: பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வரும் நிலையில் ஓபிஎஸ் அணியின் மாநில மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஓ.பன்னீர் செல்வத்துக்குக் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, தமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பெரும்பாலான கூட்டணி கட்சிகள் இந்த முறை பாஜகவிற்கு சென்று விட்டன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக, இந்த முறை 20 இடங்களில் போட்டியிடும் என தெரிகிறது.




பாஜக-பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி 10 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட தயாரகி வருகிறது பாமக. டிடிவி தினகரனின் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


இந்நிலையில், பாஜக-ஓபிஎஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது அதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுவும் கூட தேனி கிடையாதாம். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது ஓபிஎஸ் தரப்பு. இதையடுத்து தங்களது மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் ஓ.பி.எஸ். இக்கூட்டத்தில் வேறு என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.


கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் தேர்தலில் போட்டியிடாமல் வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை ஓபிஎஸ் எடுக்கலாம் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்