ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

Jan 24, 2026,05:19 PM IST

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் திமுக அமைச்சரான பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று (ஜனவரி 24, 2026) நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக சட்டமன்ற  தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சேகர்பாபு சந்திப்பு என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பானது சென்னை கோட்டையில் உள்ள தமிழக சட்டசபையில், சபாநாயகர் அப்பாவு அவர்களின் அறையில் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஆலோசனையில் இருவரும் மிக நெருக்கமாக உரையாடியதாகக் கூறப்படுகிறது.




இந்தத் திடீர் சந்திப்பிற்குப் பின்னால் பல அரசியல்  காரணங்களை இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஓபிஎஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ்ஸும் அதே பாதையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும், அதிமுக (எடப்பாடி அணி) மற்றும் பாஜக உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து திமுக தரப்புடன் ஆலோசித்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.


டிடிவி தினகரன் மீண்டும் பாஜக பக்கம் சாய்ந்துள்ளதாலும், செங்கோட்டையன் போன்றவர்கள் 'தமிழக வெற்றிக் கழகத்தில்' இணைந்துவிட்டதாலும், ஓபிஎஸ் தற்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளார். இந்த இக்கட்டான சூழலில் திமுகவில் ஓபிஎஸ் இணைய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் சமீபத்தில் கூறி வந்த நிலையில், தை மாதத்திலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை வீழ்த்த, ஓபிஎஸ் திமுகவின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறாரா அல்லது திமுக அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் திட்டமிடுகிறதா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.


மேலும், இந்தச் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் தரப்போ அல்லது அமைச்சர் சேகர்பாபு தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனச் சொல்லப்பட்டாலும், தேர்தல் நேரத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்