சென்னை: அதிமுக ஆட்சியில் பெயரளவில் அதிகாரம் இல்லாத பதவியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்தேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரது நம்பிக்கையைப் பெற்று மிகப் பெரிய விசுவாசியாக வலம் வந்தவர் ஓ.பி.எஸ். ஜெயலலிதா சில காலம் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது ஓ.பி.எஸ்தான் முதல்வராக இருந்தார். அதேபோல ஜெயலலிதா மறைந்த பிறகும் கூட அவர்தான் இடைக்காலமாக முதல்வர் பதவியில் இருந்தார்.

அதன் பின்னர் காலம் மாறியது, கோலமும் மாறியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அவருடன் மோதல் போக்கில் சில காலம் நீடித்திருந்த ஓ.பி.எஸ் பின்னர் அவருடன் கை கோர்த்தார். துணை முதல்வரானார். ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை முதல்வராகவும் , ஒரு முறை துணை முதல்வராகவும் பதவி வகித்தார். மேலும், இதுவரை தான் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் பெருமையாகும்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ.பி.எஸ். அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் ஆட்சியில் துணை முதலமைச்சர் பொறுப்பு என்ற சிறு அதிகாரம் கூட இல்லை .எந்த தனிப்பட்ட அதிகாரமும் இல்லை .பெயரளவில் அதிகாரம் இல்லாத பதவியாக துணை முதலமைச்சர் பதவியில் டம்மியாகத் தான் இருந்தேன் என்றார் ஓ.பி.எஸ்.
இதன் மூலம் எடப்பாடி அமைச்சரவையில் தான் பெயரளவுக்கு மட்டுமே துணை முதல்வராக இருந்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமியிடமே அதிகாரங்கள் குவிந்து கிடந்ததாகவும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் ஓ.பி.எஸ்.
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}