நான் "டம்மி"யாத்தானே இருந்தேன்.. அதிர வைத்த ஓ.பி.எஸ்!

Oct 12, 2023,01:11 PM IST

சென்னை: அதிமுக ஆட்சியில் பெயரளவில் அதிகாரம் இல்லாத பதவியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்தேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  கூறியுள்ளார்.


ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரது நம்பிக்கையைப் பெற்று மிகப் பெரிய விசுவாசியாக வலம் வந்தவர் ஓ.பி.எஸ். ஜெயலலிதா சில காலம் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது ஓ.பி.எஸ்தான் முதல்வராக இருந்தார். அதேபோல ஜெயலலிதா மறைந்த பிறகும் கூட அவர்தான் இடைக்காலமாக முதல்வர் பதவியில் இருந்தார்.




அதன் பின்னர் காலம் மாறியது, கோலமும் மாறியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அவருடன் மோதல் போக்கில் சில காலம் நீடித்திருந்த ஓ.பி.எஸ் பின்னர் அவருடன் கை கோர்த்தார். துணை முதல்வரானார்.  ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை  முதல்வராகவும் , ஒரு முறை துணை முதல்வராகவும் பதவி வகித்தார். மேலும், இதுவரை தான் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் பெருமையாகும்.


இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.  கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ.பி.எஸ். அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் ஆட்சியில் துணை முதலமைச்சர் பொறுப்பு என்ற சிறு அதிகாரம் கூட இல்லை .எந்த தனிப்பட்ட அதிகாரமும் இல்லை .பெயரளவில் அதிகாரம் இல்லாத பதவியாக துணை முதலமைச்சர் பதவியில் டம்மியாகத் தான்  இருந்தேன் என்றார் ஓ.பி.எஸ்.


இதன் மூலம் எடப்பாடி அமைச்சரவையில் தான் பெயரளவுக்கு மட்டுமே துணை முதல்வராக இருந்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமியிடமே அதிகாரங்கள் குவிந்து கிடந்ததாகவும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் ஓ.பி.எஸ்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்