நெல்லை வந்தே பாரத்..  கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

Sep 25, 2023,01:50 PM IST

சென்னை: சென்னை டூ திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்  கடிதம் எழுதியுள்ளார்.  


சென்னை டூ திருநெல்வேலி  இடையே வந்தே பாரத் விரைவு ரயில்  சேவையை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதுவரை நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் ஓடி வருகின்றன. இந்நிலையில் சென்னை டூ திருநெல்வேலி உட்பட 11 மாநிலங்களுக்கு இடையே நேற்று 9 வந்தே  பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.




இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  கடிதம்  எழுதியுள்ளார். அதில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் 2 புதிய ரயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை காணொளி வாயிலாக தொடங்கி வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


சென்னை எழும்பூர் -திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண  நேரம்  12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கிறது. இது தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி உள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று  தமிழக மக்கள் விரும்புகின்றனர். 


எனவே வந்தே பாரத் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார் ஓ.பி.எஸ்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்