"நான் ரெடி தான்..  வரவா".. வச்சு செய்யப் போகும் பெரிய மழை.. 6ம்  தேதி வரை..  எச்சரிக்கை!

Nov 03, 2023,04:17 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 6 தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கன்னியாகுமரி மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் ஒரு கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு கீழடுக்கு  சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

31 மாவட்டங்களில்...

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக  இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் ,விழுப்புரம் கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ,கரூர், திருச்சி ,அரியலூர் பெரம்பலூர் ,தேனி, திண்டுக்கல் ,மதுரை, புதுக்கோட்டை ,தஞ்சை திருவாரூர், நாகை, திருப்பூர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ,ஆகிய 31 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.



இன்று மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும் மாவட்டங்கள்..

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், தேனி ,தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ,ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இன்று  ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நீலகிரி ,கோவை , ஈரோடு ,திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை ,மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ,ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும் மாவட்டங்கள்..

நாளை மிக கனமழை பெய்யும் மாவட்டங்களான கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை ,தூத்துக்குடி, இராமநாதபுரம் ,ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், கன மழை பெய்யும் மாவட்டங்களான மதுரை ,விருதுநகர் ,திருப்பூர், ஈரோடு ,தென்காசி, தேனி ,திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது தமிழகத்தில் ஆறாம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதனால்  மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்