- அ.சீ.லாவண்யா
சென்னை: ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய பாதுகாப்பு மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. முன்பதிவு கவுண்டர்களில் டிக்கெட் பதிவு செய்ய வரும் பயணிகள் இனி ஒவ்வொருவரும் ஓ.டி.பி மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், தட்கல் டிக்கெட்டுகள் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரயில்வே துறையால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
புதிய நடைமுறையின் மூலம், பயணிகள் முன்பதிவு செய்யும்போது தங்களது கைப்பேசியில் வரும் ஒற்றை முறை பாஸ்வேர்டை (OTP) வழங்கி மட்டுமே பதிவை முடிக்க முடியும். இதனால் நபரின் உண்மை அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு பிரச்னைகள் குறையும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

மேலும், முன்பதிவு கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் ஏஜெண்ட்கள் மூலம் நடைபெறும் தவறான முன்பதிவு செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் குறையும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகள் இந்த புதிய முறையை வரவேற்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவின் தெளிவு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும் மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. ரயில்வே துறை, எதிர்காலத்தில் கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}