Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

Dec 04, 2025,03:53 PM IST

- அ.சீ.லாவண்யா


சென்னை: ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய பாதுகாப்பு மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. முன்பதிவு கவுண்டர்களில் டிக்கெட் பதிவு செய்ய வரும் பயணிகள் இனி ஒவ்வொருவரும் ஓ.டி.பி மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த மாற்றம், தட்கல் டிக்கெட்டுகள் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரயில்வே துறையால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.


புதிய நடைமுறையின் மூலம், பயணிகள் முன்பதிவு செய்யும்போது தங்களது கைப்பேசியில் வரும் ஒற்றை முறை பாஸ்வேர்டை (OTP) வழங்கி மட்டுமே பதிவை முடிக்க முடியும். இதனால் நபரின் உண்மை அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு பிரச்னைகள் குறையும் என அதிகாரிகள்  நம்புகின்றனர்.




மேலும், முன்பதிவு கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் ஏஜெண்ட்கள் மூலம் நடைபெறும் தவறான முன்பதிவு செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் குறையும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.


பயணிகள் இந்த புதிய முறையை வரவேற்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவின் தெளிவு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும் மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. ரயில்வே துறை, எதிர்காலத்தில் கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்.


(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்