Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

Dec 04, 2025,03:53 PM IST

- அ.சீ.லாவண்யா


சென்னை: ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய பாதுகாப்பு மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. முன்பதிவு கவுண்டர்களில் டிக்கெட் பதிவு செய்ய வரும் பயணிகள் இனி ஒவ்வொருவரும் ஓ.டி.பி மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த மாற்றம், தட்கல் டிக்கெட்டுகள் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரயில்வே துறையால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.


புதிய நடைமுறையின் மூலம், பயணிகள் முன்பதிவு செய்யும்போது தங்களது கைப்பேசியில் வரும் ஒற்றை முறை பாஸ்வேர்டை (OTP) வழங்கி மட்டுமே பதிவை முடிக்க முடியும். இதனால் நபரின் உண்மை அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு பிரச்னைகள் குறையும் என அதிகாரிகள்  நம்புகின்றனர்.




மேலும், முன்பதிவு கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் ஏஜெண்ட்கள் மூலம் நடைபெறும் தவறான முன்பதிவு செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் குறையும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.


பயணிகள் இந்த புதிய முறையை வரவேற்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவின் தெளிவு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும் மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. ரயில்வே துறை, எதிர்காலத்தில் கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்.


(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!

news

சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!

news

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்

news

கார்த்திகையில்!

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்