- சகாயதேவி
சென்னை: ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தமிழர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் திடீர் தாக்குதலால் நிலை குலைந்த இஸ்ரேல் தற்போது பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் மற்றும் விமானப்படை ஒருங்கிணைந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா முனையை சின்னாபின்னமாக்கி வருகிறது. அவர்களின் வெறித்தனமான தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. அதேசமயம், அங்கிருந்து பலர் கிளம்பி தாயகம் வரும் தகவல்களும் வெளியாகியுள்ளன.இந்தப் பின்னணியில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மாநில அரசு உதவக் களம் இறங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவி எண்களையும் அரசு அறிவித்துள்ளது. இந்த உதவி எண்களைப் பயன்படுத்தி தேவையான உதவிகளைப் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு அறிவித்துள்ள உதவி எண்கள்:
0-87602-48625
0-99402-56444
0-96000-23645
இமெயில் முகவரி:
nrtchennai@tn.gov.in
nrtchennai@gmail.com
இஸ்ரேலிலிருந்து மீட்க 30 தமிழர்கள் கோரிக்கை
இதற்கிடையே ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் 30 தமிழர்கள் தங்களை மீட்குமாறு கோரி அயலக தமிழர் நல வாரியத்தை அணுகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இவர்கள் அனைவரும் என்ஜீனியர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள். அயலக தமிழர் நல வாரியத்துடன் இவர்கள் தொடர்பு கொண்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரவித்துள்ளனர். இருப்பினும் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் இஸ்ரேலை விட்டு கிளம்ப அவர்கள் நினைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்களை பத்திரமாக மீட்க மத்திய வெளியுறவுத்துறை மூலம் இந்தியத் தூதரகத்தை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}