உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்.. தவிப்பில் தமிழர்கள்.. உதவி எண்கள் அறிவிப்பு

Oct 09, 2023,02:06 PM IST

- சகாயதேவி


சென்னை: ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தமிழர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


ஹமாஸ் அமைப்பின் திடீர் தாக்குதலால் நிலை குலைந்த இஸ்ரேல் தற்போது பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் மற்றும் விமானப்படை ஒருங்கிணைந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா முனையை சின்னாபின்னமாக்கி வருகிறது. அவர்களின் வெறித்தனமான தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.




இந்த நிலையில் இஸ்ரேலில்  வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. அதேசமயம், அங்கிருந்து பலர் கிளம்பி தாயகம் வரும் தகவல்களும் வெளியாகியுள்ளன.இந்தப் பின்னணியில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மாநில அரசு உதவக் களம் இறங்கியுள்ளது.


தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு  உதவி எண்களையும் அரசு அறிவித்துள்ளது. இந்த உதவி எண்களைப் பயன்படுத்தி தேவையான உதவிகளைப் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


அரசு அறிவித்துள்ள உதவி எண்கள்:


0-87602-48625

0-99402-56444

0-96000-23645



இமெயில் முகவரி: 


nrtchennai@tn.gov.in 

nrtchennai@gmail.com


இஸ்ரேலிலிருந்து மீட்க 30 தமிழர்கள் கோரிக்கை


இதற்கிடையே ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் 30 தமிழர்கள் தங்களை மீட்குமாறு கோரி அயலக தமிழர் நல வாரியத்தை அணுகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


இவர்கள் அனைவரும் என்ஜீனியர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள். அயலக தமிழர் நல வாரியத்துடன் இவர்கள் தொடர்பு கொண்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரவித்துள்ளனர். இருப்பினும் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் இஸ்ரேலை விட்டு கிளம்ப அவர்கள் நினைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து இவர்களை பத்திரமாக மீட்க மத்திய வெளியுறவுத்துறை மூலம் இந்தியத் தூதரகத்தை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்