எதிர்க்கட்சிகள் நேரத்தை வீணடிக்காமல்.. அரசை கேள்வி கேட்க வேண்டும்..  ஓவைசி!

Jul 28, 2023,11:16 AM IST
டெல்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக பார்லிமென்டில் அமளி செய்து, கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி வரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஏஐெம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி எழுப்பி உள்ள கேள்விகள் அனைவரிடமும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளன.

கடந்த வாரம் துவங்கி பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளில் இருந்து மணிப்பூரில் 3 மாதங்களாக நடந்து வரும் வன்முறை, கலவரம் தொடர்பான விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் அமளியில் இரு அவைகளும் தொடர்ந்து அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, கூட்டத் தொடர் முழுவதுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



இதற்கிடையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இதை ஏற்று இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தவும் சபாநாயகர் ஒப்புக் கொண்டுள்ளார். இருந்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் கடும் அமளி, கூச்சல், குழப்பத்திற்கு இடையே இன்று ஓவைசி அவையில் பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை பார்த்து, எதிர்க்கட்சிகள் அவையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் மீதான நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு பிறகும் என்ன வேண்டும்?  

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அவைகள் செயல்பட அனுமதிக்க வேண்டியது தானே? எதிர்க்கட்சிகள் எனது இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டத்தால் நடப்பு கூட்டத் தொடரில் ஏற்கனவே நாம் பல நாட்களை இழந்து விட்டோம். நாம் அரசிடம் கேள்வி கேட்க வேண்டும். அவர்களின் தோல்வியை சுட்டிக் காட்ட வேண்டும். துரதிஷ்ட வசமாக கேள்வி நேரங்களை எல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

முக்கிய மசோதாக்கள் பலரும் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. நம்மால் அந்த மசோதாக்களில் இருக்கும் குறைகளை கூட வெளிப்படுத்த முடியவில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் நடந்த கலவரங்கள் பற்றியும் விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து அவற்றை மணிப்பூர் கலவரத்துடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தக் கூடாது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு ஒரு மத்திய அமைச்சர் பேசுவது தவறு என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்