20வது மாடியிலிருந்து விழுந்து.. ஓயோ ரூம்ஸ் நிறுவனரின் தந்தை மரணம்!

Mar 11, 2023,10:35 AM IST
டெல்லி: இந்தியா முழுவதும் பிரபலமான ஓயோ ரூம்ஸ் ஹோட்டல் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் பர்சாத் அகர்வால், தான் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 20வது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். 

ஹரியானாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள டிஎல்எப் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார் ரமேஷ் அகர்வால். செக்டார் 54ல் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.  இந்த நிலையில் அந்த குடியிருப்பின் 20வது மாடியிலிருந்து ஒருவர் கீழே விழுந்து விட்டதாக செக்யூரிட்டிகளிடமிருந்து காவல்துறைக்கு போன் போனது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கீழே விழுந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஏற்கனவே  அவர் இறந்திருந்தார்.




போலீஸ் விசாரணையில்தான் அவர் ரமேஷ் அகர்வால் என்று தெரியவந்தது. தனது தந்தையின் மரணம் குறித்து ரித்தேஷ் அகர்வால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எனது தந்தை ரமேஷ்அகர்வால் மார்ச்  10ம் தேதி மரணமடைந்தார் என்ற வருத்தமான செய்தியை உங்களுடன் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். எங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.  அவரது வாழ்க்கை எங்களுக்குப் பாடம்.  எங்களது குடும்பத்துக்கு அவரது மரணம் பேரிழப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.

மார்ச் 7ம் தேதிதான் ரித்தேஷ் அகர்வாலின் திருமண வரவேற்பு டெல்லி தாஜ் பாலஸ் ஹோட்டலில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. அதுதான் ரமேஷ் அகர்வால் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். உலகின் மிகப் பெரிய வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் மகன் வரவேற்பு முடிந்த கையோடு ரமேஷ் அகர்வால் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்