- P.அகிலாண்டேஸ்வரி
அன்பு என்னும் சிறகை விரித்தால்
ஆனந்தம் என்னும் உயர்ந்த வானில் பறக்கலாம்
எவ்வித கவலைகளும் இன்றி...
அன்பு என்னும் அழியா படகை செலுத்தி தான் பாருங்களேன்
பேரானந்தம் என்னும் பெருங்கடலில்
நீந்திக் கொண்டே இருக்கலாம்
சுனாமி வந்தாலும் கூட.. துவளாமல் நிலை குலையாமல்!
அன்பின் பூந்தோட்டத்தில்
பாசம், பரிவு, பந்தம், பணிவு, ஈகை, கொடை, நட்பு, நன் மதிப்பு என்னும்
அழியா பூக்கள் பூத்துக் குலுங்குகிறதே!
அதைக் காண மனக்கண் என்னும் நுழைவுச்சீட்டு இருந்தால் போதும்
கண்டுகளிக்க...!
--

பாரமாய் போன உறவுகள்
பாரம் என கருதினால்
பெண் கருவை சுமக்க முடியாது
பாரம் என கருதினால்
மாணவர்கள் கல்வி கற்க முடியாது .
பாரம் என்று கருதினால்
சுமைதாங்கி சுமக்க முடியாது .
பாரம் என்று கருதினால்
பூமி மக்களை, மரம் ,செடி கொடி மற்றும் பல உயிர்களை சுமக்க முடியாது
ஆனால் மனிதா..!
ஏன் நீ மட்டும் பெற்றோரை பாரமாய் நினைக்கிறாய்?
--
வானவில்லே.. வானவில்லே!
ராமன் வில்லை வளைத்து
சீதையை மணந்தான்
ஏ வான வில்லே
யார் உன்னை வளைத்தது?
அதுவும் இவ்வளவு அழகாய்
எந்த ராமன் வளைத்ததோ?
(பி. அகிலாண்டேஸ்வரி, இல்லத்தரசி, புதுமுகக் கவிஞர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்)
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}