- P.அகிலாண்டேஸ்வரி
அன்பு என்னும் சிறகை விரித்தால்
ஆனந்தம் என்னும் உயர்ந்த வானில் பறக்கலாம்
எவ்வித கவலைகளும் இன்றி...
அன்பு என்னும் அழியா படகை செலுத்தி தான் பாருங்களேன்
பேரானந்தம் என்னும் பெருங்கடலில்
நீந்திக் கொண்டே இருக்கலாம்
சுனாமி வந்தாலும் கூட.. துவளாமல் நிலை குலையாமல்!
அன்பின் பூந்தோட்டத்தில்
பாசம், பரிவு, பந்தம், பணிவு, ஈகை, கொடை, நட்பு, நன் மதிப்பு என்னும்
அழியா பூக்கள் பூத்துக் குலுங்குகிறதே!
அதைக் காண மனக்கண் என்னும் நுழைவுச்சீட்டு இருந்தால் போதும்
கண்டுகளிக்க...!
--

பாரமாய் போன உறவுகள்
பாரம் என கருதினால்
பெண் கருவை சுமக்க முடியாது
பாரம் என கருதினால்
மாணவர்கள் கல்வி கற்க முடியாது .
பாரம் என்று கருதினால்
சுமைதாங்கி சுமக்க முடியாது .
பாரம் என்று கருதினால்
பூமி மக்களை, மரம் ,செடி கொடி மற்றும் பல உயிர்களை சுமக்க முடியாது
ஆனால் மனிதா..!
ஏன் நீ மட்டும் பெற்றோரை பாரமாய் நினைக்கிறாய்?
--
வானவில்லே.. வானவில்லே!
ராமன் வில்லை வளைத்து
சீதையை மணந்தான்
ஏ வான வில்லே
யார் உன்னை வளைத்தது?
அதுவும் இவ்வளவு அழகாய்
எந்த ராமன் வளைத்ததோ?
(பி. அகிலாண்டேஸ்வரி, இல்லத்தரசி, புதுமுகக் கவிஞர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்)
TVK MLAs.. எம்எல்ஏக்கள்.. இந்திய அளவில் தவெகவுக்கு 5வது இடம்.. அசத்திய விஜய்!
அதிமுக.,வில் திக்...திக்...இபிஎஸ்.,க்கு 80 பேர் ஆதரவு...அடுத்து என்ன நடக்கும்?
திருந்தி வந்த ஓபிஎஸ்ஸை சேர்க்க மறுத்தார் இபிஎஸ்.. சி.வி.சண்முகம் காட்டம்
'கருப்பு' பட சர்ச்சை: இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்தது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’!
Summer special Mango Icecream.. மாம்பழ ஐஸ்க்ரீ்ம்.. கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல!
வைகாசி விசாகத் திருவிழா .. விமரிசையாக தயாராகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அவளின் (ல்) அவன்! (16)
Tamil Short Story: 10 ரூபாய்க்கு 13 லட்சம்!
Everything is better when you decide.. கவலையை தூக்கி எறிங்க.. வாழ்க்கை அழகாய்ரும்!
{{comments.comment}}