பெஷாவர்: பாகிஸ்தானின் குவெட்ட ரயில் நிலையத்தில் இன்று நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரயில் நிலையத்தின் டிக்கெட் பதிவு மையத்தில்தான் குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குண்டு வெடித்துள்ளது. இதனால் இந்த வெடிகுண்டு, ஜாபர் எக்ஸ்பிரஸுக்கு வைக்கப்பட்ட குறியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக வெடிகுண்டு வெடித்த சமயத்தில் ரயில் அங்கு வந்திருக்கவில்லை. வழக்கமாகவே இந்த ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். குண்டுவெடிப்பு நடந்த சமயத்திலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. எனவே உயிர்ப்பலியும் அதிகமாகும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு வெடிப்பு குறித்து மாவட்ட சிறப்பு எஸ்பி முகம்மது பலூச் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் இது மனித வெடிகுண்டுத் தாக்குதலாக தெரிகிறது. இருப்பினும் விரிவான விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும். தற்போது ஆதாரங்கலை சேகரித்து வருகிறோம். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்படவுள்ளது என்றார்.
சம்பவம் நடந்த குவெட்ட ரயில் நிலையம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது. பலூச் பிரதேச மக்கள் நீண்ட காலமாக தனி நாடு கோரி போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!
அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!
முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 28, 2025... இன்று இடமாற்றங்கள் ஏற்படும் நாள்
இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!
தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!
நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்
தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!
கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
{{comments.comment}}