பாகிஸ்தானில் பயங்கரம்.. குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு.. 20க்கும் மேற்பட்டோர் பலி

Nov 09, 2024,12:15 PM IST

பெஷாவர்:  பாகிஸ்தானின் குவெட்ட ரயில் நிலையத்தில் இன்று நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


ரயில் நிலையத்தின் டிக்கெட் பதிவு மையத்தில்தான் குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குண்டு வெடித்துள்ளது. இதனால் இந்த வெடிகுண்டு, ஜாபர் எக்ஸ்பிரஸுக்கு வைக்கப்பட்ட குறியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.




ஆனால் அதிர்ஷ்டவசமாக வெடிகுண்டு வெடித்த சமயத்தில் ரயில் அங்கு வந்திருக்கவில்லை. வழக்கமாகவே இந்த ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். குண்டுவெடிப்பு நடந்த சமயத்திலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. எனவே உயிர்ப்பலியும் அதிகமாகும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


இந்த வெடிகுண்டு வெடிப்பு குறித்து மாவட்ட சிறப்பு எஸ்பி முகம்மது பலூச் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் இது மனித வெடிகுண்டுத் தாக்குதலாக தெரிகிறது. இருப்பினும் விரிவான விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும். தற்போது ஆதாரங்கலை சேகரித்து வருகிறோம். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்படவுள்ளது என்றார்.


சம்பவம் நடந்த குவெட்ட ரயில் நிலையம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது. பலூச் பிரதேச மக்கள் நீண்ட காலமாக தனி நாடு கோரி போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்

news

நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்

news

களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

news

உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!

news

எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)

news

2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

news

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

news

செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்