பாகிஸ்தானில் பயங்கரம்.. குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு.. 20க்கும் மேற்பட்டோர் பலி

Nov 09, 2024,12:15 PM IST

பெஷாவர்:  பாகிஸ்தானின் குவெட்ட ரயில் நிலையத்தில் இன்று நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


ரயில் நிலையத்தின் டிக்கெட் பதிவு மையத்தில்தான் குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குண்டு வெடித்துள்ளது. இதனால் இந்த வெடிகுண்டு, ஜாபர் எக்ஸ்பிரஸுக்கு வைக்கப்பட்ட குறியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.




ஆனால் அதிர்ஷ்டவசமாக வெடிகுண்டு வெடித்த சமயத்தில் ரயில் அங்கு வந்திருக்கவில்லை. வழக்கமாகவே இந்த ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். குண்டுவெடிப்பு நடந்த சமயத்திலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. எனவே உயிர்ப்பலியும் அதிகமாகும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


இந்த வெடிகுண்டு வெடிப்பு குறித்து மாவட்ட சிறப்பு எஸ்பி முகம்மது பலூச் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் இது மனித வெடிகுண்டுத் தாக்குதலாக தெரிகிறது. இருப்பினும் விரிவான விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும். தற்போது ஆதாரங்கலை சேகரித்து வருகிறோம். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்படவுள்ளது என்றார்.


சம்பவம் நடந்த குவெட்ட ரயில் நிலையம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது. பலூச் பிரதேச மக்கள் நீண்ட காலமாக தனி நாடு கோரி போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்