பெஷாவர்: பாகிஸ்தானின் குவெட்ட ரயில் நிலையத்தில் இன்று நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரயில் நிலையத்தின் டிக்கெட் பதிவு மையத்தில்தான் குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குண்டு வெடித்துள்ளது. இதனால் இந்த வெடிகுண்டு, ஜாபர் எக்ஸ்பிரஸுக்கு வைக்கப்பட்ட குறியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக வெடிகுண்டு வெடித்த சமயத்தில் ரயில் அங்கு வந்திருக்கவில்லை. வழக்கமாகவே இந்த ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். குண்டுவெடிப்பு நடந்த சமயத்திலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. எனவே உயிர்ப்பலியும் அதிகமாகும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு வெடிப்பு குறித்து மாவட்ட சிறப்பு எஸ்பி முகம்மது பலூச் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் இது மனித வெடிகுண்டுத் தாக்குதலாக தெரிகிறது. இருப்பினும் விரிவான விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும். தற்போது ஆதாரங்கலை சேகரித்து வருகிறோம். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்படவுள்ளது என்றார்.
சம்பவம் நடந்த குவெட்ட ரயில் நிலையம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது. பலூச் பிரதேச மக்கள் நீண்ட காலமாக தனி நாடு கோரி போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}