இஸ்லாமாபாத்: நாட்டில் சிக்கலான பொருளாதாரம் நிலவுவதால் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது பதவிக்காலம் முடியும் வரை தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறி விட்டார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீஃப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி அதிபராக தேர்ந்தெடுப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து ஆசிப் அலி சர்தாரியை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தாவின் 14வது அதிபராக மார்ச் 10ம் தேதி ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்றார்.

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தனது பதவிக் காலம் முடியும் வரை தனக்கு சம்பளம் வேண்டாம் என்று அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கருவூலத்தில் மேலும் சுமையை ஏற்றுவதை தவிர்க்கும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ பதிவை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இவர் ஏற்கனவே அதிபராக இருந்தவர் மட்டும் அல்ல. மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}