இஸ்லாமாபாத்: நாட்டில் சிக்கலான பொருளாதாரம் நிலவுவதால் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது பதவிக்காலம் முடியும் வரை தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறி விட்டார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீஃப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி அதிபராக தேர்ந்தெடுப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து ஆசிப் அலி சர்தாரியை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தாவின் 14வது அதிபராக மார்ச் 10ம் தேதி ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்றார்.
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தனது பதவிக் காலம் முடியும் வரை தனக்கு சம்பளம் வேண்டாம் என்று அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கருவூலத்தில் மேலும் சுமையை ஏற்றுவதை தவிர்க்கும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ பதிவை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இவர் ஏற்கனவே அதிபராக இருந்தவர் மட்டும் அல்ல. மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}