பாகிஸ்தானில் தீவிரவாதிகள்பயங்கரம்.. காவல் நிலையத்தில்.. சரமாரி துப்பாக்கிச் சூடு.. 10 பேர் பலி!

Feb 05, 2024,04:15 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், 10 போலீஸார் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கைபர் பக்துன்வாலா மாகாணத்தில் உள்ள டிராபன் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், இன்று அதிகாலை 3 மணி அளவில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளனர். கையெறி குண்டுகள் மற்றும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு காவல் நிலையத்தை கடுமையாக தாக்கி உள்ளனர்.


இந்த தாக்குதலில் பரிதாபமாக 10 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 6பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை நேர இருளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பித்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




போலீசார் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 


பாகிஸ்தானில் வருகிற 8ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் மக்கள் பதட்டத்தில் உறைந்து உள்ளனர்.


ஏற்கனவே பாலுசிஸ்தான் மாகாணம், காலட் நகரில் தேர்தல் அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்