இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், 10 போலீஸார் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைபர் பக்துன்வாலா மாகாணத்தில் உள்ள டிராபன் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், இன்று அதிகாலை 3 மணி அளவில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளனர். கையெறி குண்டுகள் மற்றும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு காவல் நிலையத்தை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில் பரிதாபமாக 10 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 6பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை நேர இருளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பித்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வருகிற 8ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் மக்கள் பதட்டத்தில் உறைந்து உள்ளனர்.
ஏற்கனவே பாலுசிஸ்தான் மாகாணம், காலட் நகரில் தேர்தல் அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}