இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், 10 போலீஸார் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைபர் பக்துன்வாலா மாகாணத்தில் உள்ள டிராபன் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், இன்று அதிகாலை 3 மணி அளவில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளனர். கையெறி குண்டுகள் மற்றும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு காவல் நிலையத்தை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில் பரிதாபமாக 10 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 6பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை நேர இருளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பித்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வருகிற 8ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் மக்கள் பதட்டத்தில் உறைந்து உள்ளனர்.
ஏற்கனவே பாலுசிஸ்தான் மாகாணம், காலட் நகரில் தேர்தல் அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுள்ளது.
Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்
இந்தியா திரும்பி வரும் சோழர் காலத்து செப்பேடுகள்.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?
செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு
உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி
உடல் ஆரோக்கியமே ஆகச்சிறந்த செல்வம்!
கேட்கிறதா.. உற்றுக்கேள் என் தமிழினமே.. இனப்படுகொலை மே 18 ...
சூர்யா - ஜோதிகாவின் ரூ.200 கோடி ஆடம்பர பங்களா பற்றி இதெல்லாம் தெரியுமா?
{{comments.comment}}