பிரம்மாபுத்திரா தண்ணீரை சீனா நிறுத்தினால் என்னாகும்.. ஒன்றும் ஆகாது.. அஸ்ஸாம் முதல்வர் பதிலடி!

Jun 03, 2025,11:29 AM IST

டெல்லி: பிரம்மாபுத்திரா தண்ணீரை சீனா நிறுத்தினால் என்னாகும் தெரியுமா என்று இந்தியாவை மிரட்டும் போக்கில் பாகிஸ்தான் கூறியிருப்பது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் அதிரடியாக பதிலளித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஒரு கற்பனையான மிரட்டல். பிரம்மபுத்திரா நதியில் ஓடும் நீர், இந்தியாவிலிருந்துதான் பெருமளவில் போகிறது. சீனாவின் பங்கு இதில் மிக மிக குறைவு. எனவே சீனா பிரம்மபுத்திரா நீரை தடுக்கும் என்று கூறுவது, ஆதாரமற்ற முயற்சி. இந்தியாவின் புவியியல், பருவமழை ஆகியவற்றால்தான் பிரம்மபுத்திரா நதி வலுப்பெறுகிறது.


ஒரு வேளை பிரம்மபுத்திரா நதியின் நீரை சீனா தடுக்குமானால், அது அஸ்ஸாமில் ஏற்படும் வெள்ளத்தைக் குறைத்து நமக்கு சாதகமாகத்தான் அமையும் என்றார் பிஸ்வாஸ்.




பிரம்மபுத்திரா நதியின் நீரில் 65 முதல் 70 சதவீதம் வரை இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. பருவமழை மற்றும் வடகிழக்கில் உள்ள துணை நதிகள் மூலம் கிடைக்கிறது. இந்திய-சீன எல்லைக்கு வரும்போது துடிங் ஆற்றில் (அதாவது பிரம்மபுத்திரா நதியின் சீனப் பெயர்), நீரின் ஓட்டம் வினாடிக்கு 2,000 முதல் 3,000 கன மீட்டர் வரை இருக்கும் என்றும், இது பருவமழை காலத்தில் அசாமில் 15,000-20,000 கன மீட்டர் வரை ஆக அதிகரிக்கும் என்றும் முதலமைச்சர் பிஸ்வாஸ் சுட்டிக்காட்டினார்.


நாடுகடந்த நதியான பிரம்மபுத்திரா, தென்மேற்கு சீனாவில் உள்ள கைலாஷ் மலைக்கு அருகில் உள்ள மானசரோவர் பகுதியில் இருந்து உருவாகிறது. இது திபெத் வழியாக பாய்ந்து, அருணாச்சல பிரதேசத்தின் வழியாக இந்தியாவில் நுழைந்து, அஸ்ஸாம் வழியாக பாய்ந்து, வங்காளதேசத்திற்குள் சென்று இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்