பிரம்மாபுத்திரா தண்ணீரை சீனா நிறுத்தினால் என்னாகும்.. ஒன்றும் ஆகாது.. அஸ்ஸாம் முதல்வர் பதிலடி!

Jun 03, 2025,11:29 AM IST

டெல்லி: பிரம்மாபுத்திரா தண்ணீரை சீனா நிறுத்தினால் என்னாகும் தெரியுமா என்று இந்தியாவை மிரட்டும் போக்கில் பாகிஸ்தான் கூறியிருப்பது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் அதிரடியாக பதிலளித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஒரு கற்பனையான மிரட்டல். பிரம்மபுத்திரா நதியில் ஓடும் நீர், இந்தியாவிலிருந்துதான் பெருமளவில் போகிறது. சீனாவின் பங்கு இதில் மிக மிக குறைவு. எனவே சீனா பிரம்மபுத்திரா நீரை தடுக்கும் என்று கூறுவது, ஆதாரமற்ற முயற்சி. இந்தியாவின் புவியியல், பருவமழை ஆகியவற்றால்தான் பிரம்மபுத்திரா நதி வலுப்பெறுகிறது.


ஒரு வேளை பிரம்மபுத்திரா நதியின் நீரை சீனா தடுக்குமானால், அது அஸ்ஸாமில் ஏற்படும் வெள்ளத்தைக் குறைத்து நமக்கு சாதகமாகத்தான் அமையும் என்றார் பிஸ்வாஸ்.




பிரம்மபுத்திரா நதியின் நீரில் 65 முதல் 70 சதவீதம் வரை இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. பருவமழை மற்றும் வடகிழக்கில் உள்ள துணை நதிகள் மூலம் கிடைக்கிறது. இந்திய-சீன எல்லைக்கு வரும்போது துடிங் ஆற்றில் (அதாவது பிரம்மபுத்திரா நதியின் சீனப் பெயர்), நீரின் ஓட்டம் வினாடிக்கு 2,000 முதல் 3,000 கன மீட்டர் வரை இருக்கும் என்றும், இது பருவமழை காலத்தில் அசாமில் 15,000-20,000 கன மீட்டர் வரை ஆக அதிகரிக்கும் என்றும் முதலமைச்சர் பிஸ்வாஸ் சுட்டிக்காட்டினார்.


நாடுகடந்த நதியான பிரம்மபுத்திரா, தென்மேற்கு சீனாவில் உள்ள கைலாஷ் மலைக்கு அருகில் உள்ள மானசரோவர் பகுதியில் இருந்து உருவாகிறது. இது திபெத் வழியாக பாய்ந்து, அருணாச்சல பிரதேசத்தின் வழியாக இந்தியாவில் நுழைந்து, அஸ்ஸாம் வழியாக பாய்ந்து, வங்காளதேசத்திற்குள் சென்று இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

news

வாட்ஸ்அப்பில் யூசர்நேம் வசதி: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்