திண்டுக்கல்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனியில் ஏப்., 10,11 மற்றும் 12ம் தேதிகளில் கட்டண தரிசனம் ரத்து, இந்த 3 நாட்களும் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோவில், அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாகும். இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இங்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் ரயில் மற்றும் ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதுமட்டும் இன்றி பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், தை பூசம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். தைப்பூச திருவிழா தற்போது முடிந்த நிலையில், பங்குனி உத்திர திருவிழா தொடங்கியுள்ளது. கடந்த 5ம் தேதி பழனியில் உள்ள திரு ஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கி இந்த விழா நடைபெற்று வருகிறது.
 sekar.jpg)
இந்நிலையில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வரும் 10,11 மற்றும் 12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த 3 நாட்களும் கட்டணம் இல்லாத இலவச தரிசனம் செய்யலாம். மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}