கூடலூர் சிறுத்தையை பிடித்தது எப்படி?.. யானை மீது போய் ஊசி போட்ட வனத்துறை டாக்டர்!

Jan 07, 2024,04:11 PM IST

கூடலூர்: டிரோன் கேமரா மூலம் சிறுத்தையைக் கண்டறிந்து, அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து, 2 முறை மயக்க ஊசி போட்டு அதைப் பிடித்துள்ளனர்.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒரு சிறுத்தை கடந்த 2 மாதமாக நடமாடி வந்தது. இந்த சிறுத்தை பந்தலூர், கூடலூர் சுற்றுப் பகுதிகளில் நடமாடி வந்தது. அவ்வப்போது ஆடு, மாடுகளைப் பிடித்துச் சென்றது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.


அவ்வப்போது வனத்திலிருந்து வெளியேறி கால்நடைகளை தாக்கி வந்த சிறுத்தை, கடந்த மாதம் பழங்குடியினர் குடியிருப்புக்குள் புகுந்தது. வீட்டிலிருந்து வெளியே வந்த சரிதா என்ற பெண்ணை சிறுத்தை கடித்ததால் அவர் படுகாயமடைந்தார்.  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அதே நாளில் மேலும் இருவரை காயப்படுத்தியது சிறுத்தை.




இதையடுத்து சிறுத்தையை உடனடியாக பிடிக்கக் கோரி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு 6 இடங்களில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் 15 இடங்களில் சிசிடிவி கேமராக்களும் வைக்கப்பட்டன. அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து சிறுத்தையைப் பிடிக்க 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.


இந்த நிலையில் நேற்று நான்சி என்ற 3 வயது சிறுமியை சிறுத்தை தாக்கியதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மக்கள் பெரும் கொந்தளிப்புக்குள்ளானார்கள். நேற்று விடிய விடிய பந்தலூர் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டது.


அதன்படி முதுமலையிலிருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டது. அதில் ஒரு யானையில் ஏறிக் கொண்டு வனத்துறை டாக்டர் ராஜேஷ்குமார் சென்றார். பெருங்கரைப் பகுதியில் டிரோன் மூலமாக சிறுத்தை இருந்த பகுதி அடையாளம் காணப்பட்டு  வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் துப்பாக்கி மூலமாக மயக்க ஊசி போடப்பட்டது. ஒரு ஊசி போட்டும் சிறுத்தை மயங்கவில்லை. அந்தப் பகுதியில் ஒரு புதரில் போய்ப் பதுங்கிக் கொண்டது. இதையடுத்து மீண்டும் ஒரு டோஸ் மயக்க ஊசி போடப்பட்டது.  அதைத் தொடர்ந்து சிறுத்தை மயக்க நிலைக்குப் போய் விட்டது.


அதன் பின்னர் சிறுத்தையை வலை போட்டு பிடித்து அங்கிருந்து தூக்கி வந்தனர். கூண்டு வண்டியில் ஏற்றி அதை முதுமலைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பிடிபட்ட சிறுத்தையை தங்களிடம் காட்டாமல் வனத்துறையினர் முதுமலைக்கு கொண்டு போனதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்