பாரீஸ் ஒலிம்பிக் 2024 : இந்தியாவுக்கு இன்று மேலும் 3 பதக்கம் கிடைக்க சூப்பர் வாய்ப்பு!

Jul 29, 2024,09:26 AM IST

பாரீஸ் : பாரீஸில் நடைபெற்று வரும் 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று 3 பதக்கங்களை வெல்லக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.


முன்னதாக இந்தியா நேற்று தனது முதல் பதக்கத்தை வென்றது. துப்பாக்கிச் சுடும் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


2024 ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் ஜூலை 26ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான ஜூலை 28ம் தேதி இந்தியாவின் மானு பாக்கர், துப்பாக்கி சுடும் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இது இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கமாகும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லுவதற்காக மானு 12 ஆண்டுகள் காத்திருந்து, போராடி, இதனை பெற்றுள்ளார். 




பிரதமர் மோடி, போனில் மானுவை தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மானு, வெறும் 0.1 புள்ளிகளில் வெள்ளி பதக்கத்தை தவற விட்டுள்ளார். இருந்தாலும் 22 வயதாகும் மானு, இந்தியாவை பெருமை அடைய வைத்துள்ளார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த செய்தியை கேட்டு நான் மிகவும் பெருமை அடைகிறேன். நாட்டிற்காக முதல் பதக்கத்தை வென்ற முதல் பெண்மணி நீங்கள். வாழ்த்துக்கள். டோக்கேயா ஒலிம்பிக்கில் நீங்கள் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் அனைத்தில் இருந்தும் மீண்டு வந்து, இப்போது வெற்றி பெற்றுள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருந்த பதிவில், இது வரலாற்று சிறப்பு மிக்க பதக்கம், இந்தியாவிற்கு கிடைத்துள்ள முதல் பதக்கம். துப்பாக்கி சுடுதலில் முதல் பெண் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளதால் இது தனிச்சிறப்பு வாய்ந்த பதக்கம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி திரெளபதி முர்முவும் மானுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


துப்பாக்கி சுடுதல் பிரிவில் தென்கொரியாவின் ஏ ஜின் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இவர் 243.2 புள்ளிகள் எடுத்துள்ளார். தென் கொரியாவின் கிம் ஏஜி வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார். இவர் 241.3 புள்ளிகள் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை பிடித்துள்ள மானு, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிற்கு தகுதி பெற்றுள்ளார். 


இதற்கு முன் இந்தியா 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்றது. விஜயகுமார், 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். அதற்கு பிறகு தற்போது தான் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை மானு பெற்றுள்ளார்.


இன்று மேலும் 3 பதக்க வாய்ப்பு




இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு மேலும் 3 பதக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரமீதா ஜின்டால் இன்று பங்கேற்கிறார். இதில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. அதேபோல ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா பங்கேற்கவுள்ளார். 


ஆடவர் வில்வித்தை அரை இறுதியில் இந்தியா மோதவுள்ளது. அதில் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு அது தகுதி பெறும். அதில் வென்றால் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு  அது முன்னேறும்.



சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்