பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை சுட்ட போலீஸ்.. ஏன்?

Nov 01, 2023,11:22 AM IST

பாரிஸ்: பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர்  அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பயணிகள் கூறிய புகாரைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் அந்தப் பெண்ணைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் கட்டுக்குள் வராததால் அவரை சுட்டுப் பிடித்தனர்.


பாரீஸில் உள்ள பிப்லியோத்திக் பிரான்காய்ஸ் - மிட்டரன்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு ஹிஜாப் அணிந்த பெண் அங்கிருந்த பெண்களை மிரட்டும் தொனியில் பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் எல்லாம் சாகப் போகிறீர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார். அல்லா ஹு அக்பர் என்றும் கோஷமிட்டபடி இருந்தார்.


இதையடுத்து அங்கிருந்த பயணிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்தப் பெண்ணை தனி இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரை அமைதியாக இருக்குமாறு கூறினர். பின்னர் அவரிடம் பெண் போலீஸார் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் ஏதேனும் அபாயகரமான பொருட்கள் இருக்கிறதா என்று சோதனையிட்டனர்.




ஆனால் அந்தப் பெண் போலீஸாரின் கட்டுப்பாட்டை மீற தொடர்ந்து முயற்சி செய்தார். அல்லா ஹு  அக்பர் என்று தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தார். இதையடுத்து அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.


அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிப்பொருட்கள்  எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று பாரிஸ் காவல்துறை தலைவர் லாரன்ட் நுனேஸ் கூறினார். தங்களின் சொந்த பாதுகாப்புக்காக தான் போலீஸார் ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்று காவல்துறை விளக்கியுள்ளது.


போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அப்பெண்ணின் வயிற்றில் தோட்டா பாய்ந்தது. தீயணைப்புத்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை மாற்றி அனுமதித்துள்ளனர்.  இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக சில மணி நேரங்கள் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இஸ்ரேல் - ஹமாஸ் மோதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் வலுத்துள்ளன.  பிரான்சிலும் பெரியஅளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் பெண்ணும் பாலஸ்தீன ஆதரவாளராக இருப்பார் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்